எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கடவுளின் மூளை!?!?!

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால்[மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான[?] அவருக்கும் மூளை தேவைதானே?

உண்டெனில், அதற்கும் ‘உருவம்’ உண்டல்லவா? இல்லையெனில் அது அருவமானதா?

அருவமான ஒன்றின் மூலம் சிந்தித்துச் செயல்பட முடியுமா?

அது சாத்தியமா?

சாத்தியம்தான் என்பதை அறிவியல்பூர்வமாக எவரேனும் நிரூபித்தால் கொஞ்சமும் தயங்காமல் கடவுளை நம்பலாம்.

எப்போதேனும் எவரேனும் நிரூபிப்பார்களா?

எப்போது?

மோடி வாயால் சுடும் வடைகளை இலவசமாய் வாரி வழங்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்!!!

பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில், 'நமோ' கல்வி & தொண்டு அறக்கட்டளை சார்பில், 1,000 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவும், தமிழகத்தைச் சேர்ந்த 'பாராலிம்பிக்' வெற்றியாளர்களைப் பாராட்டவும் நேற்று விழா நடந்தது.

இதில் சி.பி.ராதாகிருஷ்ணன், “பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொடுத்துள்ளார்[?]; தமிழின்[+தமிழ்நாடு] பெருமையைச் சென்ற இடங்களிலெல்லாம் பரப்புகிறார்” என்று பேசியிருக்கிறார்[https://www.dinamalar.com].


தமிழ் வளர்க்க ஒரு பைசா[கோடி கோடியாச் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் செலவிடுவது போல்] செலவிட வேண்டாம்; வானளவாப் புகழ்ந்தாலே தமிழர்கள் மெய் சிலிர்ப்பார்கள். புகழ்பவர்களைப் போற்றுவார்கள்; தேர்தல் நேரத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறவர் மோடி.


மோடியைப் போல் ராதாகிருஷ் புத்திசாலி அல்ல என்றாலும் ஒருபோதும் செய்நன்றி மறவாதவர். அதனால்தான்.....

தனக்குக் கவர்னர் பதவி கொடுத்த மோடியை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் புகழ்ந்து போற்றுகிறார்.


சி.பி ராதாகிருஷ்ணனுக்கு இப்போதைய பதவிக்காலம் முடிந்ததும் அவர் மீண்டும் ஆளுநர் ஆக்கப்படுவார் என்பது 100% நிச்சயம்!