எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

மோடி வாயால் சுடும் வடைகளை இலவசமாய் வாரி வழங்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்!!!

பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில், 'நமோ' கல்வி & தொண்டு அறக்கட்டளை சார்பில், 1,000 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவும், தமிழகத்தைச் சேர்ந்த 'பாராலிம்பிக்' வெற்றியாளர்களைப் பாராட்டவும் நேற்று விழா நடந்தது.

இதில் சி.பி.ராதாகிருஷ்ணன், “பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லுாரிகளைக் கொடுத்துள்ளார்[?]; தமிழின்[+தமிழ்நாடு] பெருமையைச் சென்ற இடங்களிலெல்லாம் பரப்புகிறார்” என்று பேசியிருக்கிறார்[https://www.dinamalar.com].


தமிழ் வளர்க்க ஒரு பைசா[கோடி கோடியாச் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் செலவிடுவது போல்] செலவிட வேண்டாம்; வானளவாப் புகழ்ந்தாலே தமிழர்கள் மெய் சிலிர்ப்பார்கள். புகழ்பவர்களைப் போற்றுவார்கள்; தேர்தல் நேரத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறவர் மோடி.


மோடியைப் போல் ராதாகிருஷ் புத்திசாலி அல்ல என்றாலும் ஒருபோதும் செய்நன்றி மறவாதவர். அதனால்தான்.....

தனக்குக் கவர்னர் பதவி கொடுத்த மோடியை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் புகழ்ந்து போற்றுகிறார்.


சி.பி ராதாகிருஷ்ணனுக்கு இப்போதைய பதவிக்காலம் முடிந்ததும் அவர் மீண்டும் ஆளுநர் ஆக்கப்படுவார் என்பது 100% நிச்சயம்!