கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையின் மலையின் உச்சியில், பிரமாண்டமான கொப்பரையில் எண்ணை ஊற்றி, காடாத் துணியில் திரி செய்து தீ பற்றவைத்துத் ‘கார்த்திகை மகா தீபம்’ என்று சொல்லி வழிபடுவதை வழக்கமாக்கியுள்ளார்கள் நம் மக்கள்.
மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத் துணிக்கு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாகிவிட்டதொரு பழக்கம்.
மனிதரைப் போலவே பிற உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு; அறிதல் அறிவும் உண்டு.
உணர்தலும் அறிதலும் இல்லாத சடப்பொருள்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட துணியும் ஒன்று. காடாத்துணி துணிகளில் ஒரு வகை. இதைத் தேவைக்கேற்ற வகைகளில் வடிவமைத்து மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தீபம் ஏற்றப் பயன்படும் இந்தச் சடப்பொருளான காடாத் துணி, சிறப்புப் பூஜை செய்யாவிட்டால், கோபித்துக்கொண்டு தன்னில் தீ பற்ற அனுமதிக்காதா?
நம்மவர்களில் பெரும்பாலானதொரு கூமுட்டைக் கூட்டம் ஆடு, மாடு, குரங்கு, கழுகு, பாம்பு, மூஞ்சூறு, நாய், பேய் போன்றவற்றைக் கடவுள்களாக்கிக் கொண்டாடி, தங்களைப் படு படு முட்டாள்களாக உலகுக்கு அடையாளப்படுத்துவது போதாதா?
உலகில் வெகு வேகமாக அறிவியல் வளரும் நிலையில், இதைப் போன்ற செயல்களின் மூலம், தங்களை முட்டாள்களாகவே நிலைநிறுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறது இக்கூட்டம்.
அண்ணாமலையாரால்[இருந்தால்] மட்டுமே இவர்களைத் திருத்த இயலும்.
