எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 26 ஜூன், 2025

'கிணற்றுத் தவளை' அமித்ஷா கவனத்திற்கு... ‘ஆங்கிலம் இணைப்புப் பாலம்; சுவர் அல்ல’!

#டெல்லியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அவர், “ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பேசினார்# -இது செய்தி.

                                                *   *   *   *   *

//கர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற இந்தியாவில்கூட, பள்ளிகளில் ஆங்கிலம் விருப்பமான பயிற்றுவிப்பு ஊடகமாகும். 

இது தேசிய மற்றும் சர்வதேசத் தேர்வுகள் நடத்தப்படும் மொழி; அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் மொழி.

இளம் தலைமுறையை உலகக் கல்வியாளர்களுடன் இணைக்கும் ஊடகம். 

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அல்லது சர்வதேச சமூகங்களுடன் உறவாட விரும்பும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, ஆங்கிலம் ஒரு தேர்வாக, அதாவது அது ஒரு பாலமாக அமைந்துள்ளது[English a bridge, not a wall]; தடுப்புச் சுவராக அல்ல.

இது ஒரு கிராமப்புற மாணவரின் கனவுகளை ஹார்வர்ட் அல்லது ஆக்ஸ்போர்டின் விரிவுரை அரங்குகளுடன் இணைக்கும் ஒரு பாலம்.

ஓர் இந்தியத் தொடக்க நிறுவனம் தனது தயாரிப்பை ஒரு ஐரோப்பிய முதலீட்டாளருக்கு வழங்க அனுமதிக்கும் பாலம். 

டோக்கியோவில் உள்ள ஒரு சக ஆராய்ச்சியாளருடன் புனேவில் உள்ள ஒரு விஞ்ஞானி உரையாட அனுமதிக்கும் பாலம். 

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.thestatesman.com/opinion/english-a-bridge-not-a-wall-1503449838.html#google_vignette

22 நிமிடங்களில் மோடி ‘அதை’ச் சாதித்தாராம்! அம்ம்ம்ம்மாடியோவ்!!

அறிவிப்பு:

மோடி குறித்துப் பதிவுகள் எழுதுவதில் எனக்குப் போதிய நாட்டம் இல்லை. எனினும், மனம்போன போக்கில் அவர் பேசுவது அதைத் தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது!

                             *   *   *   *   *

//2025இல் இந்தியா-பாகிஸ்தான்  போர் நான்கு நாட்கள் நீடித்தது. இது மே 7 முதல் 10 வரை நடந்தது// இது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான உலகறிந்த செய்தி.

போர் என்பது, தொடுக்கப்படுவதற்கு முன்னால், பின்விளைவுகளை ஆராய்தல், திட்டமிடல்[எதிரியின் படைபலத்தோடு தன் பலத்தை ஒப்பிடுதல் போன்றவை], மோதலுக்குத் தயாராவது என்று பல நிலைகளை உள்ளடக்கியது.

நினைத்தவுடன் களத்தில் இறங்குவதோ வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதோ 100% நடவாத காரியம்.

நடத்திக் காட்டியதாக மோடி முழங்கியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது; அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

22 நிமிடங்களில்.....!?[கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு கவனித்தாரா?!]

இது மனித இனத்தவருக்கு இயலாத காரியம். மோடி கடவுளால் அனுப்பப்பட்டவர்[இவரும் கடவுளே] என்பதால் சாத்தியமாயிற்றோ!?