//நயினார் நாகேந்திரன், ‘விஜய்’யை “அரசியல் அனுபவமில்லாதவர்” என்று கூறி, “நீ முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழித்துப் பேசினார்//*
நடிகை திரிஷாவை மேற்கண்டவாறு கொச்சைப்படுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனங்களுக்கு உள்ளான நயினார் நாகேந்திரன், அது குறித்துக் கீழ்க்காணும் வகையில் வருத்தம் தெரிவித்ததாக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதென்ன ‘யாரேனும்’? செய்யக்கூடாத மாபெரும் குற்றத்தைச் செய்துவிட்டு, ‘திரிஷா[+விஜய்]வின் பெயர் சொல்லி வருத்தம் தெரிவிக்காத அளவுக்கு அத்தனை மண்டைக் கொழுப்பா இந்தப் ‘பாஜக’காரனுக்கு?!
குடும்பப் பெண்ணோ, நடிகையோ, விலைமகளோ[அவளும் ஒரு குடும்பத்துப் பெண்தான்> வயிற்றுப்பாட்டுக்காக இந்தத் தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம்] ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவளை இந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருப்பது, மன்னிக்கவே கூடாத இழி செயல் ஆகும்; கடும் தண்டனைக்குரியதும்கூட.
திரிஷா ஆக்ரோஷக் குணமுள்ள ஆடவர்களின் பாதுகாப்பில் இருந்திருந்தால், இந்த ஆளைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்திருப்பார்கள்.
மேலும், வெறுமனே வருத்தம் தெரிவித்து மறந்துவிடச் சொல்லுகிற குற்றம் அல்ல இது. திரிஷாவை, அவரின் அனுமதியுடன் நேரில் சந்தித்து, அவரின் பாதம் தொட்டு[அதற்கான தகுதிகூட இந்த நபருக்கு இல்லை] மன்னிப்புப் கேட்க வேண்டும்.
இந்த ஆள் அதைச் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
* * * * *
https://minnambalam.com/nainar-nagendran-clarifies-his-statement-on-vijay-trisha/[copy&paste]
