எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 28 மார்ச், 2019

தரம் தாழ்ந்த தமிழர்கள்!

தமிழ் பேசுபவரெல்லாம் தமிழர் அல்ல. இவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் 'நான் தமிழன்' என்று சொல்லிக்கொள்வதையே விரும்பாதவர்கள்; 'வெறுப்பவர்கள்' என்பதே பொருத்தமான சொல்.

''தமிழில் என்ன இருக்கிறது? தமிழை வைத்துப் பிழைக்க முடியுமா?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பவர்களும் இவர்கள்தான்.

இனவுணர்வு உள்ள சிறுபான்மைத் தமிழர்கள் கோழைகள்; இவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்காண துணிவு இல்லாதவர்கள். ஆனாலும்.....

தம் தாய்மொழி தமிழ் அல்லவெனினும், திருத்தமாய்த் தமிழ் பேசி, தமிழப் பற்றுடன் 100% தமிழனாய் வாழ்பவர்களை, ''இவரெல்லாம் தமிழரல்ல'' என்று வாய் கூசாமல் மேடையேறி முழங்குவார்கள்; நோகடிப்பார்கள்.

இவ்வகையில் மனம் நோகடிக்கப்பட்டவர்களில், பிரபல ஊடக இயலாளர் 'பாண்டே'யும் ஒருவர்; குமுதம் வார இதழில் வாசகருக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பணியைச் செய்துவருகிறார்.

இந்த வாரக் குமுதம்[03.04.2019] வார இதழில், வாசகர் எல்.சார்லஸ்[கடலூர்] என்னும் வாசகரின் கேள்விக்குப் பாண்டே அவர்கள் அளித்த பதில் கீழே.....

நன்றி: குமுதம்
==============================================================================