எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 28 மார்ச், 2019

தரம் தாழ்ந்த தமிழர்கள்!

தமிழ் பேசுபவரெல்லாம் தமிழர் அல்ல. இவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் 'நான் தமிழன்' என்று சொல்லிக்கொள்வதையே விரும்பாதவர்கள்; 'வெறுப்பவர்கள்' என்பதே பொருத்தமான சொல்.

''தமிழில் என்ன இருக்கிறது? தமிழை வைத்துப் பிழைக்க முடியுமா?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பவர்களும் இவர்கள்தான்.

இனவுணர்வு உள்ள சிறுபான்மைத் தமிழர்கள் கோழைகள்; இவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்காண துணிவு இல்லாதவர்கள். ஆனாலும்.....

தம் தாய்மொழி தமிழ் அல்லவெனினும், திருத்தமாய்த் தமிழ் பேசி, தமிழப் பற்றுடன் 100% தமிழனாய் வாழ்பவர்களை, ''இவரெல்லாம் தமிழரல்ல'' என்று வாய் கூசாமல் மேடையேறி முழங்குவார்கள்; நோகடிப்பார்கள்.

இவ்வகையில் மனம் நோகடிக்கப்பட்டவர்களில், பிரபல ஊடக இயலாளர் 'பாண்டே'யும் ஒருவர்; குமுதம் வார இதழில் வாசகருக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பணியைச் செய்துவருகிறார்.

இந்த வாரக் குமுதம்[03.04.2019] வார இதழில், வாசகர் எல்.சார்லஸ்[கடலூர்] என்னும் வாசகரின் கேள்விக்குப் பாண்டே அவர்கள் அளித்த பதில் கீழே.....

நன்றி: குமுதம்
==============================================================================


6 கருத்துகள்:

  1. சிறிய பதிலில் அரிய உண்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் சங்கடத்துக்கு அவர் ஆளாகியிருத்தல் கூடாது.

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  2. உண்மைதான் சீண்டுவது தானே நம்மவர்கள் கைவந்த கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  3. நல்ல பதில் சொல்லி இருக்கிறார் பாண்டே!

    பதிலளிநீக்கு