எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''...மகா மகா பெரியவா அருளுரை!!!

"ஆயுர் வேதத்தில் 'நாஸ்திகனுக்கு வைத்யம் செய் யாதே' என்று சொல்லியிருக்கிறது. அது இந்த[?] உள்ளார்த்தத்தில்தான். கேட்கிறபோது, "இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!" என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்." (தெய்வத்தின் குரல் பாகம் 3 - பக்கம் 734).[நன்றி: 'உண்மை']


மேற்கண்ட புத்திமதியை மருத்துவர் சமுதாயத்திற்கு வழங்கியவரான, முன்னாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சுவாமியைத்தான் குமுதம், தினமலர், காலைக்கதிர், தினமணி, கல்கி, இந்து தமிழ் 'காமதேனு' போன்ற தமிழ்ப் பருவ இதழ்கள் இன்றளவும் 'நடமாடிய/நடமாடும் கடவுள்' என்று போற்றிப் புகழ்ந்து பரப்புரை செய்கின்றன!

நாத்திகன் மட்டும் இவர்கள் போற்றும் கடவுளால்/கடவுள்களால் படைக்கப்படவில்லையா? படைத்தது யார்?

மகா மகா பெரிய மகானின் புகழ் பரப்புவோர் பதில் சொல்வார்களா?!