பக்கங்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''...மகா மகா பெரியவா அருளுரை!!!

"ஆயுர் வேதத்தில் 'நாஸ்திகனுக்கு வைத்யம் செய் யாதே' என்று சொல்லியிருக்கிறது. அது இந்த[?] உள்ளார்த்தத்தில்தான். கேட்கிறபோது, "இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!" என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்." (தெய்வத்தின் குரல் பாகம் 3 - பக்கம் 734).[நன்றி: 'உண்மை']


மேற்கண்ட புத்திமதியை மருத்துவர் சமுதாயத்திற்கு வழங்கியவரான, முன்னாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சுவாமியைத்தான் குமுதம், தினமலர், காலைக்கதிர், தினமணி, கல்கி, இந்து தமிழ் 'காமதேனு' போன்ற தமிழ்ப் பருவ இதழ்கள் இன்றளவும் 'நடமாடிய/நடமாடும் கடவுள்' என்று போற்றிப் புகழ்ந்து பரப்புரை செய்கின்றன!

நாத்திகன் மட்டும் இவர்கள் போற்றும் கடவுளால்/கடவுள்களால் படைக்கப்படவில்லையா? படைத்தது யார்?

மகா மகா பெரிய மகானின் புகழ் பரப்புவோர் பதில் சொல்வார்களா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக