பக்கங்கள்

சனி, 20 ஏப்ரல், 2019

பொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்!!!

ஜோதிடமும் கைரேகையும் அறிவியல்துறை சார்ந்தவை என்று புருடா விட்டு ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஜோதிடர்களுக்கும் கைரேகை வல்லுநர்களுக்கும் கீழ்க்காணும் வகையில் சவால் விட்டார் ஓர் அறிஞர். 

சவாலை ஏற்றுச் சாதித்துக் காட்டுபவர்களுக்கு நூறாயிரம் ரூபாய்[இக்கால மதிப்பு ஒரு கோடியைத் தாண்டக்கூடும்] பரிசளிப்பதாகவும் அறிவித்தார்.

அவர் மரணம் எய்தும்வரை சவாலை ஏற்க எவரும் முன்வரவில்லை. சவால்.....

'மிகச் சரியாக, அர்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க, துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றோடு கணிக்கப்பட்டுத் தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லது கைரேகைப் பதிவுகளிலிருந்து எவை எவை ஆண்களுடையவை, எவையெவை பெண்களுடையவை, எவையெல்லாம் செத்துப்போனவர்களுக்கு உரியது என்பதை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும். 05% வரை பிழை நேர்ந்தால் ஏற்கப்படும்.'

இந்த அறிஞரின்  சவாலை, அவர் மரணம் எய்தும்வரை எவருமே ஏற்க முன்வரவில்லை. அறிஞர்.....

ஈழத்துப் பெரியார் என்று போற்றப்பட்ட டாக்டர் கோவூர்.

==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக