பக்கங்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

மஹா...பெரியவா நிகழ்த்தும்[!] மகா...மகா... பெரிய அற்புதங்கள்!!!

ஒரு சமயம் காஞ்சி மடத்துப் பசு ஒன்று நிறை மாதக் கர்ப்பமாக இருந்ததாம்; கன்றைப் பிரசவிக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியதாம். கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து, பசுவின் கருப்பையிலிருந்த கன்று இறந்துவிட்டதாக அறிவித்தார்களாம்.

இதை அறிந்த மகா பெரியவா கண்களை மூடிக் கண நேரம் தியானம் செய்தாராம். பசுவைச் சற்று நேரம் உற்றுப்பார்த்தாராம். சிறிது நேரத்தில், பசுவின் வயிற்றிலிருந்து கன்று வெளியே விழுந்ததோடு துள்ளிக் குதித்துத் தாய் மடி தேடி முட்டி முட்டிப் பால் குடித்ததாம்[குமுதம் 24.04.2019]. [பெய்ய இருந்த மழையை ஒரு விரல் உயர்த்தித் தடுத்து நிறுத்தியதோடு, மீண்டும் பெய்யப் பணித்தார் இவர் என்பது கடந்த வாரக் குமுதம் கதை].
தொடர்ந்து இம்மாதிரியான அதிசயங்களை மகா மகா பெரியவா நிகழ்த்தியதாக வாரா வாரம் கதை அளந்துகொண்டிருக்கிறது குமுதம் வார இதழ்[இதன் மூலம் இஸ்லாம், கிறித்தவ மதங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறார்களாம்].

இந்தப் பொய்ப்பிரச்சாரப் பணியை ஏற்கனவே தினமலர் நாளிதழ் செய்துகொண்டிருக்கிறது. 'தமிழால் இணைவோம்' என்று சொல்லி ஓரளவு நல்ல தமிழில் செய்திகளை வழங்குகிற 'இந்து தமிழ்' காமதேனு இதழும் இவர்களுடன் கூட்டணி அமைத்து, மகா மகா பெரியவாளைக் கடவுள் என்று நம்ப வைக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது.

காலம் சென்ற இந்த மிக நல்ல மனிதரைக்[திருக்குறளை இழித்துப் பேசியவர் என்றாலும், நல்லொழுக்கத்துடனும் அடக்கத்துடனும் உண்மையான இறைப் பற்றுடனும் வாழ்ந்தவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை] கடவுள் ஆக்குவதில் ஒரு கும்பல்[சாதியைக் குறிப்பிட நான் விரும்பவில்லை] அதிதீவிரமாகச் செயல்படுவதன் உள்நோக்கம்தான் என்ன?

ஒன்று: தங்களைக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று மக்களை நம்பச் செய்வது[மகா...பெரியவருக்கு[அமரர் ஆகிவிட்டதால்] எந்தவிதப் பயனும் இல்லை]. 

இரண்டு: மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டுவிடாமல் தமிழ்மக்களைத் தடுத்துக்கொண்டே இருப்பது. இதன் மூலம், தமிழ் மன்னர்களின் ஆதரவிலும், தமிழ் மக்களின் உழைப்பிலும் உருவான கோயில்களில் தங்களுக்கான செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்வது.

திட்டமிட்டு இந்தக் கும்பல் செய்யும் தொடர் பரப்புரையைக் கண்டித்து எழுதவோ பேசவோ சீரிய சிந்தனையாளர்கள் இன்று இல்லாமல் போனது பரிதாபத்துக்குரியது.

இவர்களின் இந்தக் கூட்டுச் சதி குறித்துச்  சாமானியனான நான் அவ்வப்போது எழுதுகிறேன். என் கண்டனம் வாசகர் பலரையும் சென்றடைவதைத் தடுப்பதற்கு இவர்கள் செய்த சூழ்ச்சியால்தான் தமிழ்மணம் என் பதிவுகளை நிராகரிக்கிறது என்பது என் நம்பிக்கை.

இதனாலெல்லாம் நான் மனம் தளர்ந்துவிடப் போவதில்லை. இனியும் தொடர்ந்து எழுதுவேன். ஒரு நாளில் பத்துப்பேர் என் தளத்திற்கு வருகை புரிந்தாலும் சரியே.
==================================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக