பக்கங்கள்

புதன், 17 ஏப்ரல், 2019

புதிரான தமிழ்மணத்தின் போக்கு!!!




கடந்த பல மாதங்களாக, தமிழ்மணம் என் பதிவுகளை நிராகரித்து வருகிறது. பலமுறை முயன்றும்கூட இணைப்பு சாத்தியம் ஆகவில்லை.

நிராகரிப்புக்கான காரணத்தை அறிவிக்கும் பழக்கம் தமிழ்மணத்துக்கு இல்லை.

தமிழுக்கு 'விளம்பரம்' வழங்கப்பட்ட பிறகு, ஏதேதோ பெயர்களில் எதையெதையோ எழுதிச்[சிறப்பாக எழுதுபவர்கள் உண்டு] சிலர் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் எழுதத் தெரியாதவர்கள்[பிழைகள் நேர்வது இயல்பு. பிழையுடன் எழுதுபவர்களை நான் குறை சொல்லவில்லை] எல்லாம் எதைஎதையோ கிறுக்குகிறார்கள். தமிழ்மணம் இணைத்துக்கொள்கிறது.

முற்றிலும் ஆங்கிலத்திலேயே(?) ஒருவர் தொடர்ந்து பதிவுகள் எழுதித் தமிழ்மணத்தில் இணைக்கிறார்.

நான் எழுதிய...எழுதும் பதிவுகளில் கணிசமானவை மூடநம்பிக்கைகளைச் சாடுபவை; பல மனிதாபிமானம் போற்றுபவை; பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தத் தூண்டுபவை; தனிப்பட்ட எவருடைய மனதையும் நோகடிப்பவை அல்ல. இருந்தும்.....

தமிழ்மணம் என் பதிவுகளை அலட்சியப்படுத்துகிறது. இயன்றவரை தமிழைச் சிறப்பிக்கும் வகையில் பதிவுகள் எழுதிய/எழுதும் என்னை அவமானப்படுத்துகிறது[பின்னணியில், தமிழுக்கும் தமிழருக்கும் எதிராகச் செயல்படுபவர்கள் இல்லாமலிருந்தால் மகிழ்ச்சி].

எத்தனை சிந்தித்தும் இதற்கான காரணத்தை/காரணங்களை என்னால் கண்டறிய இயலவில்லை.

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்மணம் தந்த ஆதரவை நன்றியுடன் நினைவுகூரும் நான் தன்மானம் உள்ளவன். இனியேனும் என் பதிவுகளைத் தமிழ்மணம் ஏற்கவேண்டும் என்பதற்காக இந்தக் கருத்துரையைப் பதிவு செய்யவில்லை.

தமிழ்மணத்தின் 'போக்கு' குறித்துத் தமிழ்ப் பதிவர்கள்[இந்த என் தளத்திற்கு வருகை புரிபவர்கள் தினசரி 40 - 50 மட்டும்] சிந்திக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகும்.

நன்றி.
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக