எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 5 ஜனவரி, 2024

மோடிக்குக் ‘கொத்து’ப் புரோட்டா கொடுத்த ‘பூரி’ சங்கராச்சாரியன்!!!

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலைக்கு உயிரூட்டுவது['பிரதிஷ்டை’] குறித்த செய்தி ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது.

இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனவாம்.

மேலும்,

பல முக்கியத் தலைவர்களுக்கும், ஆன்மிகப் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்.....

மோடியின் ஆதரவாளர்களுக்குக் கடும் அதிர்ச்சி தரும் வகையில், “ராமர் சிலையைத் தொட்டுப் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கையில் நான் கைதட்ட வேண்டுமா?” என்று கேட்டு அந்நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று, சனாதனவாதிகளின் கூட்டமொன்றில் பங்கு பெற்றபோது பேசியிருக்கிறது பூரி சங்கராச்சாரியன் சாமி.

சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பதையும், மோடி தலைமையில் அது சாத்தியமில்லை என்பதையும் காரணங்களாகக் காட்டியிருக்கிறார் இந்த மகான்[பிரதிஷ்டை செய்வதற்கான உரிமையை இவரும் இவரைச் சார்ந்தவர்களும் பெற்றது எப்படி? என்று எந்தவொரு பக்திமானும் இதுவரை கேட்டதில்லை].

இப்படிப் பேசியதன் மூலம் இந்த நபர் மோடியைப் பெரிதும் அவமானப்படுத்தியுள்ளார் என்பதே நம் மக்களின் கருத்தாக இருக்கக்கூடும்.

ஆனால்,

அடியேனைப் பொருத்தவரை இந்த ஆசாமி நம் பிரதமரின் முகத்தில் காரித் துப்பியிருக்கிறார்[எச்சிலை] என்றே சொல்லத் தோன்றுகிறது.

மோடி அவமானப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவரின் அதீதப் பக்தியை நாம் குறை சொல்வது பண்பாடு அல்ல எனினும், கண்ட கண்ட போலிச் சாமியார்களை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதற்கான தண்டனை இது என்று சொல்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை.

பூரியான் சொன்னது போல், மோடி ராமர் சிலையைத் தொட்டுப் பிரதிஷ்டை செய்வது உறுதிதானா என்பது நமக்குத் தெரியாது.

ஆயினும்.....

அவர் கண்டிப்பாகத் தனக்குத் தெரிந்த பக்திப் பாடல்களை[குஜராத்தி மொழியில்]ப் பாடி[ மோடிக்கு வேதமந்திரம் தெரியாதது ஒரு பிரச்சினை அல்ல] ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்திடல் வேண்டும் என்பது நம் விருப்பம். இது, பூரியின் முகத்தில் காறித் துப்பிய[பதிலடி] திருப்தியைத் தரும் என்பது உறுதி.

செய்வாரா நம் பிரதமர் நரேந்திர மோடி?

                                         *   *   *   *   *

https://www.hindutamil.in/news/india/1178961-puri-shankaracharya-says-wont-visit-ayodhya-and-rituals-must-conform-to-shastras.html 

நாமக்கல் ஆஞ்சநேயர்... “மெது வடை வேண்டாம், ‘மசால் வடை’ குடுங்கப்பா”

“வடை மாலைன்னா நாமக்கல் ஆஞ்சநேயருக்கு உசுரு. 
108, 1008 என்று வடைகள் தின்னா பகவான் ஆஞ்சநேயருக்கு வயிறு நிரம்பாது. இனிமே 1,00,008[லட்சத்து எட்டு வடை] ‘வடை மாலை’ போட்டு அபிஷேகம் பண்ணனும்” என்று வெறுமனே கோரிக்கை மட்டும் வைக்காமல் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள் நாமக்கல் ‘இந்து மக்கள் கட்சி’க்காரர்கள்.

பந்தாவா பதாகை பிடிச்சிட்டு நிற்கிறவர்கள் எண்ணி எட்டு பேர்[படத்தோடு, கொட்டை எழுத்தில் பத்திரிகைச் செய்தி வேறு]தான். நான் நாமக்கல்காரன் என்பதால் அவமானப்பட்டுத் தலை குனிந்து நடமாடுகிறேன். 

கூலி கொடுத்தாவது,  ஐம்பது அறுபது பேரைத் திரட்டக்கூடவா இவர்களுக்கு வசதி இல்லை? அப்புறம் என்ன, மக்கள் கட்சி, மாக்கான்கள் கட்சியெல்லாம்?

காலங்காலமாக, ஆஞ்சநேயருக்கு உளுந்து வடையைத்தான் மாலையாகப் போட்டு அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஆமை வடை, பருப்பு வடை, கீரை வடை, மசால் வடை, தவளை வடை, கீமா வடை[இறைச்சி சேர்த்துச் செய்யப்படுவது] மாமா வடை, மாமி சுட்ட வடை என்று வடைகளில் எத்தனையோ ரகம் இருக்கு. அதுகளையெல்லாம் மாலையாக்கிப் போட்டால் ஆஞ்சநேய சாமி புளகாங்கிதப்பட்டுக் கேட்ட வரமெல்லாம் தருவார்; முன்வைத்த கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுவார்.

இதை ஏன் ஆஞ்சநேயத் தாசர்கள் செய்ய மறந்தார்கள்.

செய்யும் அளவுக்கு மண்டையில் மசாலா இருந்தால்.....

அபிஷேகம் என்னும் பெயரில், வடைகளை அள்ளி எடுத்துவருவது, பலர் சேர்ந்து அவற்றை மாலை ஆக்குவது, பல பூசாரிகள் 18 அடி உயரச் சிலைக்கு  அணிவிப்பது, பிறகு அவற்றைப் பிரித்தெடுத்துப் பக்தர்களுக்கு வழங்குவது என்றிப்படி இடம் மாறுவதால் அவை அசுத்தமாகும்; பிரசாதம் என்று பக்திப் பரவசத்துடன் வாங்கித் தின்னுவதால்[பக்தியின் பெயரால் நாளும் பரப்பப்படும் மூடத்தனம் இது]  தொற்று நோய் தாக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

இது புரிந்திருந்தால்.....

காத்திருந்து, பசிக்குக் கையேந்தும் பிச்சைக்காரகளுக்கு வடைகளைத் தானமாக கொடுத்திருப்பார்கள். அறிவுபூர்வமாகச் செயல்பட்ட நிம்மதி இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆண்டுக்கணக்கில் சிந்தித்தும் நமக்குப் புரியாத புதிர் என்னவென்றால்.....

12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்[மனிதனுக்கு ஆறறிவு வாய்க்காத நிலை] அயோத்தியை ஆண்டதாகச் சொல்லப்படும் ராமனை வைத்து, வால்மீகி புனைந்த கற்பனைக் கதையில் இடம்பெற்ற ஒரு குரங்கை யாரோ சிலர் கடவுளாக்க, கால நேரம் கருதாமல் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கானவர்கள் நாமக்கல் வந்து வழிபடுகிறார்களே, இது எப்படி?

இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றாலும், இந்தப் புண்ணியப் பூமி[?]யில் புத்தியுள்ளவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது 100% புரிகிறது!