எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 13 மே, 2025

பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறானா நம் எதிரி பாகிஸ்தானி?!

பாகிஸ்தானின் முதுகெலும்பை முறித்துவிட்டதாக நம் பெருமதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள், நேற்று இரவு[08.00 மணி] நம் நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பெருமிதப்பட்டார்.

பஞ்சாபிலுள்ள ஆதாம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்று வீரர்களிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்; "இனி ஒரு முறை பாகிஸ்தான் வாலாட்டினால் அதை ஒட்ட நறுக்குவேன்” என்பது போல் எச்சரித்தார்.

பதற்றத்திலிருந்த நம் மக்களும் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்கள்.

‘யூடியூப்’ தளத்தில் உலா வந்தபோது கீழ்க்காணும் காணொலி கண்ணில் பட்டு அடியேனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 


***செய்தி[பாகிஸ்தானின் அத்துமீறல்] பொய்யானதாக இருந்தால் நல்லது என்பது நம் உள்மன ஆசை.

'இரண்டு மூளைகள்'..... கொடுத்துவைத்த கரப்பான் பூச்சிகள்!![பகிர்வு]

கரப்பான் பூச்சிகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன.

ஒன்று தலையிலும் மற்றொன்று வயிற்றுக்கு அருகிலும் உள்ளன[one inside their skulls, and a second, more primitive brain that is back near their abdomen].

இந்த உள்ளமைவு, அவை தலையை இழந்தாலும்கூட, தொடர்ந்து நகர உதவுகிறது.

கரப்பான் பூச்சிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேகமாக நகர்கின்றன; பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றை நினைவில் கொள்கின்றன.

அவற்றின் மூளை மனிதர்களின் மூளையை விட மிக மிக மிகச் சிறியது. ஆனால், அவற்றில் இரண்டு மடங்கு ‘சினாப்ஸ்கள்’ [நரம்பணுக்களின்(neurons) இடையே தகவல்களைக் கடத்துபவை] உள்ளன. இதனால் அவை தகவல்களைச் சிறப்பாகச் சேமித்துச் செயல்படுகின்றன.

2 மூளை உள்ள 10 உயிரினங்கள்: