எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 19 ஜூன், 2025

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்துறை அமைச்சர்!!!

முன்னாள் அரசு ஊழியர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் - அத்தகையச் சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நான் நம்புகிறேன் என்றார்[https://www.news18.com/amp/india/those-who-speak-english-in-country-will-soon-feel-ashamed-amit-shah-ws-l-9393567.html].

உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியது மனப்பூர்வமானதும் உண்மையானதும் என்றால், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மாநில மொழிகளையும்[இந்தி அவற்றுள் ஒன்று மட்டுமே] ஆட்சிமொழிகளாக ஆக்கியிருத்தல் வேண்டும்[இன்றைய அறிவியல்&தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே].

இவர்[கள்> +மோடி] நடைமுறைப்படுத்தியிருப்பதோ எங்கெங்கு காணினும் இந்தி... இந்தி... இந்தி... இந்தி[+சமஸ்கிருதம்] மட்டுமே!

இத்தனை வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு, மாநில மொழிகளை[தாய்மொழிகள்]க் காப்பது தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களின் கடமை ஆகும்.

இந்த உண்மையை அறிந்து உணர்ந்து செயல்படுவார்களா நம் மக்கள்?

எத்தனை விருதுகள்[28] மோடிக்கு! அத்தனைப் பெரிய ஆளுமையா இவர்?!?!

//இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார். இந்திரா காந்தியும் இதேபோல் இரண்டு விருதுகளைப் பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார்[ராஜீவ் காந்தி எதையும் பெறவில்லை].

முன்னாள் பிரதமர்கள் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவாக இருக்கும் நிலையில்.....

பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக, 2016 & 2025க்கு இடையில் வெளிநாடுகளில் இருந்து 28 மிக உயர்ந்த மாநில[?] விருதுகள்[இவற்றில் கேட்டு வாங்கியவை எத்தனை?!] வழங்கப்பட்டுள்ளன// என்பது செய்தி.

மோடிக்கு அளப்பரிய இந்த விருதுகளைப் பெற்றுத்தந்தது வருடைய தொலைநோக்குத் தலைமையாம்!

அதென்ன ‘தொலைநோக்கு’த் தலைமை? ‘அண்மை நோக்கு’த் தலைமை என்று ஒன்று உண்டா?

உங்களுக்குப் புரிகிறதோ அல்லவோ, எங்கள் குலசாமி சாட்சியாக எனக்குப் புரியலீங்க.

எதற்கு இந்த ஒப்பீடு?

இரண்டிரண்டு விருதுகளைப் பெற்ற நேரு, இந்திரா அம்மையார், மன்மோகன் சிங் ஆகியோரைவிடவும் 28 பெற்ற மோடி அறிஞரா? அதீத ஆளுமைத் திறன் வாய்ந்தவரா? உயர் பண்பாளரா? 

“ஆம்” என்பார்கள் மோடியின் அல்லக்கைகள்.

நீங்கள்?

                                 *   *   *   *   *

https://www.newindianexpress.com/nation/2025/Jun/17/pm-modi-sets-record-with-most-foreign-honours-for-an-indian-pm-after-receiving-cypruss-top-honour