எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பிரேமலதா அம்மையாருக்கு ஒரு விண்ணப்பம்!

''கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு ''ஐயோ கடவுளே'ன்னு அப்புறம் புலம்பாதீர்கள்'' என்று விசயகாந்தின் மனைவி மதிப்பிற்குரிய பிரேமலதா பேசியதாக 'News 7' தொலைக்காட்சி இன்றிரவு[12.04.2018] 08.45 மணி அளவில் செய்தி வெளியிட்டது.

பாவம் பிரேமலதா. தமிழக வாக்காளர்கள் அத்தனை பேரும் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பேசியிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

கடவுள் பக்தி இல்லாதவர்களும் இம்மண்ணில் பரவலாக இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். 

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் கடவுள் பக்தி இல்லாத வேட்பாளர்களுக்கான பட்டியலை ஊடகங்கள் வாயிலாக அவர் அறிவித்தால், அது கடவுள் பக்தி இல்லாத வாக்காளப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும் என்பது என் எண்ணம்.

அறிவிப்பாரா தமிழர் தலைவி பிரேமலதா?
பிரேமலதா பேச்சு சற்று முன்னர் க்கான பட முடிவு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




பெண்ணின் உடம்பில் 'தொடக்கூடாத' இடம் எது?!

பெங்களூருவில், நடிகையும் அரசியல்வாதியுமான 'குஷ்பு' தேர்தல் பரப்புரை செய்துவிட்டுத் தன் வாகனத்துக்குத் திரும்பியபோது, நெரிசலைப் பயன்படுத்தித் தவறான எண்ணத்துடன் ஒரு நபர் அவரைத் தீண்ட, அவரின் கன்னத்தில் குஷ்பு அறைந்ததாக இன்றைய 'இந்து தமிழ்'[12.04.2019] செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்
''அந்த நபர் முதல் முறை என்னைத் தவறாகத் தீண்டினார். தெரியாமல் செய்திருப்பார் என்று கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் முறையும் அவ்வாறு செய்ததால் கோபத்தில் அவரை அறைந்தேன்'' என்று குஷ்பு சொன்னதையும் பதிவு செய்துள்ளது இந்த நாளிதழ்.

இதே செய்தியை வேறு சில நாளிதழ்கள், 'தொடக்கூடாத இடத்தில்' தொட்டதாகக் குறிப்பிட்டு வாசகரைக் 'கிளுகிளு'ப்பில் ஆழ்த்தியுள்ளன.

பெண்ணைப் பொருத்தவரை, ஒட்டுமொத்த உடம்புமே அந்நியரால் தொடக்கூடாத ஒன்றுதான். அங்கே தொடலாம்; இங்கே தொடக்கூடாது என்னும் வரன்முறைக்கு இடமே இல்லை.

இந்தவொரு ஊடக நாகரிகம் 'இந்து தமிழ்' நாளிதழுக்குத் தெரிந்திருக்கிறது. மற்ற நாளிதழ்களும் அறிந்து செயல்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

https://tamil.samayam.com/news-video/news/actress-kushboo-has-slapped-a-man-one-who-misbehaved-with-her-in-the-bangalore-election-campaign/videoshow/68830631.cms
==================================================================================