பக்கங்கள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பிரேமலதா அம்மையாருக்கு ஒரு விண்ணப்பம்!

''கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு ''ஐயோ கடவுளே'ன்னு அப்புறம் புலம்பாதீர்கள்'' என்று விசயகாந்தின் மனைவி மதிப்பிற்குரிய பிரேமலதா பேசியதாக 'News 7' தொலைக்காட்சி இன்றிரவு[12.04.2018] 08.45 மணி அளவில் செய்தி வெளியிட்டது.

பாவம் பிரேமலதா. தமிழக வாக்காளர்கள் அத்தனை பேரும் கடவுள் பக்தி உள்ளவர்கள் என்ற நினைப்பில் இவ்வாறு பேசியிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

கடவுள் பக்தி இல்லாதவர்களும் இம்மண்ணில் பரவலாக இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். 

நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் கடவுள் பக்தி இல்லாத வேட்பாளர்களுக்கான பட்டியலை ஊடகங்கள் வாயிலாக அவர் அறிவித்தால், அது கடவுள் பக்தி இல்லாத வாக்காளப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும் என்பது என் எண்ணம்.

அறிவிப்பாரா தமிழர் தலைவி பிரேமலதா?
பிரேமலதா பேச்சு சற்று முன்னர் க்கான பட முடிவு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக