எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 13 ஏப்ரல், 2019

தமிழனாம் தமிழன்...நல்லா வருது வாயில!

நைட்டும்பான், ஃபைட்டும்பான்;

எப்பப் புறப்படுறீங்கன்னா 'ஏர்லிமார்னிங்'பான்;

மசுரு வெட்டிக்கிறத 'ஹேர் கட்டிங்' ஆக்கினவன் இவன்;

'பை த பை', 'ஆன் தி வே', 'வொய்ஃபு', 'நைஸ்', 'சைஸ்'னு இங்கிலீசு கலக்காம இவனால பேசவே முடியாது.

பெத்த புள்ளகளுக்குத் தமிழில் பேரு வைக்கிறதை தகுதிக் குறைவா நினைக்கிறவன்.

அன்றாடக் கைச்செலவுக்குக் காசில்லேன்னாலும் கடன்பட்டாவது புள்ளைகளைக் கான்வெண்ட்டுலதான் படிக்க வைப்பான்.

இவன் நடத்துற கடைக்கெல்லாம் இங்கிலீசில்தான் பெயர்ப்பலகை. தமிழுக்குப் போனாப்போகுதுன்னு பலகையின் ஓர் ஓரத்தில் கொஞ்சுண்டு இடம்.

தமிழ் நீச பாஷைன்னு எவனோ நீசப்பயலுக சொன்னதை வேதவாக்கா நம்புறவன். கோயிலுக்குப் போனா, தமிழில் அர்ச்சனை பண்ணுன்னு அர்ச்சகர்கிட்டே இவன் ஒருபோதும் சொன்னதில்லை. 

''தமிழ் வாழ்க! வளர்க!! வெல்க!! என்றெல்லாம் நம் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும்போது தவறாம கை தட்டுவான்.

மோடி தாடின்னு தமிழ் தெரியாத பெரிய பெரிய தலைவர்கள் வந்து, ''வணக்கம்''னும் ''நன்றி''ன்னும் ஒப்புக்கு நாலு தமிழ் வார்த்தைகளை ஒப்பிச்சாப் போதும், ''ஆஹா...ஓஹோ''ன்னு ஆனந்தக் கூச்சல் எழுப்பி ஆர்ப்பரிப்பான்.

இவன்தான் தமிழன்! 

தமிழனாம் தமிழன்...வாயில வரக்கூடாத வார்த்தையெல்லாம் வருது; மனசு கொதிக்குது!
தொடர்புடைய படம்
==================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக