எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 25 நவம்பர், 2025

ராமர் ‘கைவசம்’ இருக்க 2047வரை காத்திருப்பது தேவையா மோடி?!

த்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினாராம். என்னவெல்லாம் பேசினார்[+ நம் விமர்சனம்]?*

மோடி: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....

நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.

மோடி: அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.

நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.

மோடி: வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......

நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.

மோடி: கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.


நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***


மோடி: நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.


நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].


*https://www.dinamalar.com/news/india-tamil-news/pm-modi-ayodhya-visit-this-flag-represents-the-resurgence-of-indian-civilisation-says-pm-modi/4091708


***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:

பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.

மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.

உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.

மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.

https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india