எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி! ஆனால்.....

//பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லில், சிலர் துணியைச் சுற்றி, சாமி சிலை என்று கூறி வழிபாடு செய்துவருவதாகவும், அந்தக் கல்லை அகற்ற வேண்டும் என்றும் சக்தி முருகன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது என்று அவர்கள்[போலீசார்] கூறினார்களாம்.

இந்நிலையில், தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்தி முருகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சாலையோரத்தில் கல்லை நட்டு, துணியைப் போர்த்தி, பூஜைகள் செய்து அதைச் சாமி என்று நம்பும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன” என்று வேதனை தெரிவித்தார்.


அந்தக் கல் சிலையா, இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது என்றும், இதற்காக இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டதோடு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லைப் போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்// என்பது செய்தி[https://www.hindutamil.in/news/tamilnadu/1194636-superstition-prevails-to-the-extent-of-planting-a-stone-and-calling-it-swami.html].


செய்தியறிந்து நாம் மிக மிக மிக மகிழ்ந்தோம்.


ஆனால், சற்றே சிந்தித்தபோது, ‘பிரமாண்டக் கட்டடத்தில்[கோயில்] கல்லை நட்டு, பட்டுத் துணிகளைச் சுற்றி, விதம் விதமாய்த் தங்க வைர நகைகள் அணிவித்து, மந்திரங்கள் சொல்லி[அவை, கடவுளால் அசரீரியாகச் சொல்லப்பட்டவை என நம்ப வைக்கப்பட்ட பொய்கள்]ப் பூஜைகள் செய்வது மூடநம்பிக்கை. இதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தால் நீதிபதி அவர்கள், “மண், உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்ட இந்தச் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கும் காவல்துறையினருக்கும் கட்டளையிடுவாரா?


அறிய இயலவில்லை.


நாம் குறிப்பிட்ட முறையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் அங்கம் வகிக்கும் காலம் மலருமேயானால் நம் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும்.


எனவே, மேற்கண்ட வகையில் நீதியரசர் என், ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் அளித்த தீர்ப்பால் நாம் பெற்ற மகிழ்ச்சி தற்காலிகமானது என்பதறிக.

50 மில்லியன் மனித உயிர் பறிக்கும் X என்னும் புதிய தொற்றுநோய்!!!

டிசீஸ் எக்ஸ்[Disease X]’ என்பது  ஒரு புதிய தொற்று ஆகும்.

“X நோயானது ஒரு 'X' என்ற நோய்க் கிருமி காரணமாகத் தோன்றலாம்[கண்டறியப்பட்ட பிறகு பெயர் வைப்பார்கள்]. இது விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்; இது ஓர் ‘ஆர்என்ஏ’ வைரஸாக இருக்கலாம்” என்று மருத்துவர் நேஹா என்பவர் தெரிவித்துள்ளார்.

இப்போது மனிதர்களைத் தாக்கிக்கொண்டிருப்பதல்ல இந்த நோய்; எதிர்காலத்தில் ஒரு தொற்றுநோயாகத் தாக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது, இது இப்போதைக்கு ஓர் ‘அனுமான’ நோய்.

பிப்ரவரி 2018இல், உலகச் சுகாதார அமைப்பு(WHO) எதிர்காலத்தில் தொற்றுநோயைத் தூண்டக்கூடிய அறியப்படாத ஓர் அனுமான நோய்க்கிருமிக்குப் பதிலாக ‘நோய் X’ என்ற பெயரை உருவாக்கியது.

300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 2022இல் சந்தித்தார்கள். இன்னும் முழுமையாக அறியப்படாத இந்தத் தொற்று நோய் குறித்து ஆராய்வது அவர்கள் சந்திப்பின் நோக்கம் ஆகும்.

இந்த நோய் தாக்கினால், இதன் விளைவு ‘கோவிட் 19’ஆல் நேர்ந்ததைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பது அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட தகவல் ஆகும்.

WHOவும் இது குறித்து எச்சரித்துள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தில் விவாதம் நிகழ்த்தப்பட்ட நிலையில், இது சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

இதனால் பாதிப்பு ஏற்படுவது உறுதியானால், சோதனைகள் நிகழ்த்துவது, தடுப்பூசிகள் கண்டறிவது போன்ற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள நேரிடும்.

‘ரெம்டெசிவிர்’ என்பது ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும், இதை X நோய்க்குப் பயன்படுத்த இயலுமா என்பது குறித்த ஆய்வும் நிகழ்த்தப்படுகிறது.

ஆகஸ்ட் 2023இல், UK அரசாங்கம் X பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

கீழ்க்காண்பவை  நோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது.

திடீர்க் காய்ச்சல், தசைப்பிடிப்பு, மயக்கம், கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி, வீங்கிய கண்கள், வெளிச்சத்தை உணரும் திறன் பாதிப்பு போன்றவை. 

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பிற வயிற்றுத் தொல்லைகள், தொண்டைப் புண், மனக் குழப்பம் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம். 

கல்லீரல் பாதிப்பும்[[பெரிதாதல்] ஓர் அறிகுறி ஆகலாம்.

மேலும் சில அறிகுறிகள்:

சீரற்ற இதயத் துடிப்பு, வீங்கிய நிணநீர்க் கணுக்கள், வாய், தொண்டை ஆகியவற்றில் கொப்புளங்கள். 

மேற்கண்ட இந்த அறிகுறிகள்[அடேங்கப்பா, இத்தனை அறிகுறிகளா?] தோன்றி நான்கைந்து நாட்களில், நோயாளிகளின் பல உறுப்புகள் செயலிழக்கலாம்;  இரண்டாவது வாரத்தில், சில நோயாளிகள் இறப்பைச் சந்திக்கலாம்.

x நோயால் தாக்கப்பட்டு ஒன்பது அல்லது பத்து நாட்கள்வரை சாகாமல் தப்பிப் பிழைத்தவர்கள் இதிலிருந்து குணமடையத் தொடங்குவார்கள்[!?] என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எக்ஸ்  தாக்கினால் இறப்பவர் எண்ணிக்கை 50 மில்லியனாக இருக்கலாம். 

இது குறித்த ஆய்வுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

                                         *   *   *   *   *

https://tamil.asianetnews.com/health/what-is-disease-x-could-it-be-more-deadly-than-covid-doctor-explanation-rya-s1minc

https://www.bscnursing2022.com/disease-x-pandemic/

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/next-pandemic-driven-by-disease-x-already-on-its-way-may-kill-millions-more-report/articleshow/103924695.cms?from=mdr

https://www.indiatoday.in/world/story/disease-x-who-chief-tedros-calls-for-world-pandemic-treaty-to-prepare-for-another-possible-virus-outbreak-2491574-2024-01-21