//மரணத்திற்குப் பின்னரும் ஒலிக்கும் கமேனியின் எச்சரிக்கை! 'X' தளத்தில் வெளியான மர்மப் பதிவு - அதிர்ச்சியில் இஸ்ரேல்!//*
கடந்த பிப்ரவரி 28அன்று அமெரிக்க & இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உத்தியோகப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) பதிவிடப்பட்ட ஓர் அதிரடி எச்சரிக்கை சர்வதேச ரீதியாகப் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
"சீயோனிச ஆட்சி[இஸ்ரேலியர் ஆட்சி] நிலைகுலையும்"- என்பதுதான் அந்த டிஜிட்டல் எச்சரிக்கை.
கமேனியின் மறைவிற்குப் பின்னர் அவரது கணக்கை நிர்வகிப்பவர்களால் இப்பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
உண்மை இதுவாக இருக்கையில், இறந்துபோன கமேனி எச்சரிக்கை விடுத்தது எப்படி?
இது மர்மப் பதிவு வேறாம். என்ன வெங்காய மர்மம்? மரணித்த கமேனியின் ஆவி இந்த எச்சரிக்கையை 'X'இல் பதிவு செய்தததா?
கையாலாகத்தனத்தின் வெளிப்பாடு இது.
ஈரான் படையினருக்கு உண்மையான நாட்டுப்பற்றும் மதப்பற்றும் இருந்தால், கடைசி ஒரு வீரன் உள்ளவரை எதிரிகளுடன்[டிரம்ப் & நெதன்யாகு] போரிட்டு வீரமரணம் எய்தலாம்.
ஒட்டுமொத்த உலகமும் அவர்களைப் பாராட்டும்; போற்றும்.
கமேனி எச்சரிக்கிறாராம்! கோழைகள்!!

