எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 22 செப்டம்பர், 2025

கோடிகளில் புரளும் கூத்தாடி[விஜய்]யின் கட்டுக்கடங்காத கொட்டமும் கொண்டாட்டமும்!!!

//கூத்தாடி விஜய் திருவாரூருக்கு வந்தாராம். இந்தக் கோடிகளில் புரளும் குபேரனை வரவேற்கும் விதமாகக் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்தார்களாம் ‘தவெக’ நிர்வாகிகள். தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி விஜய் இதைப் பெற்றுக்கொண்டாராம்//[பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத ஊடகக்காரன்கள் வெளியிட்ட செய்திகளில் இதுவும் ஒன்று].

கழுத்தைத் தீண்டாத அதி பிரமாண்ட மாலை. அதை அந்தரத்தில் தொங்கவிட ஒரு கிரேன். இவற்றிற்கான செலவு ஆயிரக்கணக்கில்.

விசிலடிச்சான் குஞ்சுகள் எழுப்பும் ஆரவாரங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே, அந்தரத்தில் போடப்பட்ட அதி பிரமாண்ட மேடையில், தடியன்களின் பாதுகாப்புடன் ஆனந்தத்தில் துள்ளி நடைபயிலும் நடிகனுக்கு இது தெரியும்தானே?

பார்வையாளருக்குக் குனிந்து குனிந்து கும்பிடு போட்டுக் கையசைக்கும் இந்த அதிரடி அரசியல்வாதிக்கு, தெருவோரங்களில் கையேந்திக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண்ணில் பட்டதே இல்லையா?

வெற்று ஆடம்பரத்துக்காக வீணடித்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை[மொத்தச் செலவையும் கணக்கிட்டால் அது கோடியைத் தாண்டக்கூடும்]ஊரூராய்ச் சென்று, பட்டினியில் வாடும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்திருந்தால், அவை அவர்களின் ஒரு நாள் பசி தணியப் பயன்பட்டிருக்கும்.

இது ஏன் இந்தப் புதுரகப் புரட்சித் தலைவனின் புத்தியில் உறைக்கவில்லை?

மக்களை ஏமாற்றிக் கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கென்றே இங்கு எவனெவனோ அரசியலுக்கு வருகிறான். அவன்களின் நடிப்பில் புத்தியையும் தன்மானத்தையும் இழப்பதே காட்டுமிராண்டித் தமிழனுக்கு வழக்கமாகிப்போனது!

* * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/police-register-case-against-3-people-for-throwing-a-huge-garland-at-vijay-using-a-crane-1180910


தேவைக்கு மேல் ஒரு மொழி கற்பிப்பது ‘திணிப்பு’ அல்லவா முட்டாள் அமைச்சனே?

//நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை; ஒப்பந்தத்தை ஏற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் - தர்மேந்திரப் பிரதான்// [https://tamil.indianexpress.com/tamilnadu/dharmendra-pradhan-about-nep-education-10484859]

கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், அவை குறித்துச் சிந்திப்பதற்கும் தாய்மொழிக் கல்வி போதும். பிற மொழியினருடனான தொடர்புக்கும், இன்றளவில், அறிவியல் அறிவைப் புதுப்பிக்கவும் ஆங்கிலம் தேவை.

ஆக, இந்த இரு மொழிகளையும் கற்பது மட்டுமே[விரும்புவோர் எத்தனை மொழியும் கற்கலாம்] எங்களுக்கான தேவை; உரிமை.

மத்திய மண்டூக அமைச்சனே,

மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்காவிட்டால், கல்விக்கான நிதியுதவி இல்லை என்கிற நீங்கள்[நாட்டை ஆளும் ‘பாஜக’ சங்கிகள்], “நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை" என்று புளுகித் திரிவது ஏன்?

தேவைக்கு மேல் ஒரு மொழியைக் கற்கச் சொல்வது ‘திணிப்பு’ அல்லாமல் வேறென்ன முட்டாள் தர்மேந்திரப் பிரதானே?