எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நடிகர் ரஜினி ஒரு ‘மகத்தான’ மனிதரா?

நடிகர் ரஜினியால்தான் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற முடியும் என்று நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிற தமிழருவி மணியன், அவர் மீதான தன் நம்பிக்கையை, ‘ராணி’[09.02.2020] வார இதழுக்கு வழங்கிய கருத்துரையில், ‘ரஜினியே தனது நம்பிக்கை நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டதோடு.....

‘அவர்[ரஜினி] ஒரு மகத்தான மனிதர்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

ரஜினி ஒரு நல்ல நடிகர் என்பது நமக்குத் தெரியும். அவர் பின்பற்றும் ஆன்மிகம் பற்றியோ, அரசியல்வாதி ஆவது குறித்தோ மணியனிடம் நாம் விளக்கம் ஏதும் கேட்க விரும்பவில்லை. கேட்க விரும்புவது.....

அவரை மகத்தான மனிதர் என்கிறாரே, ‘ரஜினி மகத்தான மனிதர் ஆனது எப்படி?’ என்பது பற்றி விரிவானதொரு அறிக்கை வெளியிடுவாரா?

அது தவிர, ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்குகிற இவர், ‘தமிழருவி மணியன் ஒரு உத்தமன்; யோக்கியன்’ என்று மக்களிடம் சான்றிதழ் பெறுதல் வேண்டும். 

பெறுவாரா? எப்போது?