பிச்சை எடுப்பது ஒரு பழங்காலச் சமூக நிகழ்வாகும். இடைக்காலத்திலும் முந்தையக் காலங்களிலும் பிச்சை எடுப்பது ஏற்றுக்கொள்ளுதற்குரிய தொழிலாகக் கருதப்பட்டது[விக்கிப்பீடியா].
அக்காலமோ இக்காலமோ கோயிலுக்குச் சென்று, உண்டியலில் பணம் போட்டு[வசதிக்கேற்ப அதன் அளவு கூடும்; குறையும்]க் கடவுளிடம் வேண்டுதல் வைப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. காரணம், மக்களிடம் குறையவே குறையாத பக்தியுணர்வு.
பக்தர்களின் எண்ணிக்கை குறையாதது போலவே, கோயில் வாசலில் கூடிப் பிச்சைக்குக் கையேந்துவோர்[பலரும் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்; உழைத்துப் பிழைப்பதற்கான உடல் வலிமையை இழந்தவர்கள்] எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை[அதிகரிக்கிறது].
பக்தர்கள் அத்தனைப் பேரும் கடவுளைக் கொண்டாடச் செலவழிக்கும் பணத்தைப் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தலாம்[உரிய முறையில், இது சம்பந்தப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற குழுக்களிடம் நன்கொடை வழங்குவதன் மூலம்> அங்கே ஊழல் இடம்பெறாமல் கண்காணிப்பது சமூக ஆர்வலர்களின் கடமை].
ஆனால், பக்தர்களோ பயன்படுத்துவதில்லை. காரணம் அவர்களின் மனங்களில், பக்தியுணர்வு நிரம்பி வழிகிறதே தவிர, போதுமான அளவுக்குப் ‘பரிவுணர்வு’ சுரப்பதில்லை.
பைசா பொறாத பக்தி! திருந்தும் மனப்பக்குவம் இல்லாத மக்கள்!!
விடிவு பிறப்பது எப்போது?

