எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

புதன், 12 பிப்ரவரி, 2020

நாத்திகர்கள் சிறுபான்மையினர் அல்லர்!!!

நாத்திகர்களைப் பிற மதத்தவரைக் காட்டிலும் இந்து மத வெறியர்களே மிகக் கடுமையாகச் சாடுகிறார்கள்; தாக்குதல் நடத்துகிறார்கள். காரணம், ‘அவர்கள்[நாத்திகர்கள்] மிகச் சிறுபான்மையினர்; எதிர்த்தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையற்றவர்கள்’ என்று அவர்கள் நம்புவதுதான்.

உண்மை நிலவரம் முற்றிலும் மாறானது.

இது குறித்ததொரு புள்ளிவிவரத்தை உலக அளவிலான இரண்டு ஆய்வு நிறுவனங்கள்[பியூ பாரம், வோர்ல்டோமீட்டர்] வெளியிட்டுள்ளன.

அப்புள்ளிவிவரத்தின்படி, உலகில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அறியத்தக்கது.


நன்றி: ‘தினத்தந்தி’ நாளிதழ்[சில நாட்கள் முன்பு வெளியானது]