எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

மரபணு[DNA] வரிசை இத்தனை நீளமா!!!???

'மரபணு' எனப்படும் Deoxyribonucleic Acid[DNA] குறித்து, ஓரளவுக்கேனும் அறியாதோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருத்தல்கூடும். நம் வம்சாவளியைக் கண்டறிய இது உதவுகிறது என்பது இதன் தலையாய பயன்பாடு.

வேறு எதெதற்கெல்லாம் இது பயன்படுகிறது என்பதற்கான ஒரு சிறு பட்டியலை https://spark.adobe.com/page/PkaU0NvujPKWR/ என்னும் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. மிக்க மகிழ்வுடன் பகிர்கிறேன்.

                                           *   *   *

*நாம் வளர்வது, செயல்படுவது, இனப்பெருக்கம் செய்வது என அனைத்து நிகழ்வுகளும் நம் மரபணுவைப் பொருத்தே அமைகின்றன!

*DNA-வின் உள்ளடக்கமான 'Gene'  நமது அங்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

*ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்ட இரட்டைப் பிறவிகளைத் தவிர அனைவரின் மரபணுக்களும் தனித்துவம் வாய்ந்தவை.

*குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தடயவியல் நிபுணர்கள் மரபணுவைப் பயன்படுத்துகின்றனர்.

*ஒரு மனிதனுக்குள் இருக்கும் மரபணுவை வரிசையில் வைத்தால்...... அது பூமியிலிருந்து சூரியனுக்கு 600 முறை சென்று திரும்பும் அளவுக்கு நீளம்[நம்ப முடியலையே! விஞ்ஞானிகள் பொய் சொல்ல மாட்டார்களே?!]உடையது.

*மனித மரபணுவும், வாழைப்பழ மரபணுவும் 50 % வரை ஒரே மாதிரியானவை.

*மனித மரபணுவும் சிம்பன்ஸி குரங்கின் மரபணுவும் சுமார் 98% ஒரே மாதிரியானவை[மனிதர்களைக் காட்டிலும் இந்தச் சிம்பன்ஸிகள் அதிகம் நம்பத்தகுந்தவைதானே?!]!

==========================================================================