"தற்கொலை நோய்"(Trigeminal Neuralgia > TN) என்பது திடீரெனத் தோன்றும் கடுமையான & தீவிரமான முக வலியாகும். வலியின் வேதனையான தன்மை காரணமாக இதற்குத் "தற்கொலை நோய்" என்று பெயரிடப்பட்டது, இது ஒரு நபரின் மனநிலையைக் கடுமையாகப் பாதித்துத் தற்கொலைக்குத் தூணடும் அளவுக்கு விரக்தியடையச் செய்யும்.
அறிகுறிகள்:
கன்னம், தாடை, பற்கள், கண்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் அழுத்தமாகக் குத்தும் வலி தோன்றுதல்.
வலி பொதுவாக முகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்படுதல்.
பல் துலக்கும்போதும், முகத்தைக் கழுவும்போதும், முகத்தில் அழுத்தமாகக் காற்று படும்போதும், தொடும்போதும்[லேசாக] வலியை உணரமுடியும். வலி சில நிமிடங்கள் நீடிக்கலாம். இது ஒரு நாளில் பல முறை நிகழலாம்; உணவுண்ணுதல், உறங்குதல் போன்ற தினசரிச் செயல்பாடுகளைப் பாதிக்கும்; மனநிலை வெகுவாகச் சீர்குலையும்.
காரணங்கள்:
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதலும், ‘ட்ரைஜீமினல் நரம்பில்’ சுருக்கம் ஏற்படுதலும்.
சிகிச்சை:
வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளுதம்[மருத்துவரின் பரிந்துரைப்படி]
கதிர்வீச்சு[சிகிச்சை].
மூளை அறுவைச் சிகிச்சை[அழுத்தத்தைக் குறைக்க நரம்புக்கும் இரத்த நாளத்திற்கும் இடையில் ஒரு மெத்தை வைப்பது இதில் அடங்கும்].
மேலும் மருத்துவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகள்.
* * * * *
விரிவானதும் மிகச் சரியானதுமான தகவல்களுக்கு:

