எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 25 ஜனவரி, 2024

கற்சிலையும் ‘பிராணப் பிரதிஷ்டை’யும் வஞ்சக நெஞ்ச மனிதர்களும்!!!

22.01.2024வரை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்து கற்சிலைக்குள் தெய்வீகத்தன்மையை ஏற்றும் மந்திரம் பிராமணர்களுக்கு மட்டுதான் தெரிந்திருந்தது. அதாவது, கடவுள் அவர்களுக்கு மட்டும்தான் கற்றுக்கொடுத்திருந்தார்.

22.01.2024ஆம் நாளில்தான் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றும் பேற்றினைச் சூத்திரரான நரேந்திர மோடிக்கும் அவர் அருள்பாலித்திருக்கிறார் என்பதை உலகம் அறிந்தது.

பிராணப் பிரதிஷ்டை மூலம் வெறும் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி, அதைத் தெய்வமாக்க முடியும் என்றால், ஆறறிவு படைத்த மனிதர்களையும் தெய்வீகக் குணம் பெற்ற மனிதத் தெய்வங்களாக மாற்ற முடியும் என்பது உறுதி.

பொறாமை, சூது, வாது, வஞ்சகம், குரோதம், வன்கொடுமை செய்தல் போன்ற பல கெட்ட குணங்களின் வாழிடமாக உள்ள மனிதர்களையும், மேற்படிப் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி இவ்வுலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்குள்ளும் பிராமணர்கள் தெவீகத்தைப்  புகுத்தியிருக்கலாம்.

அவர்கள் அதைச் செய்திருந்தால்.....

ஒட்டுமொத்த உலகமும் சொர்க்கப்புரியாக மாறியிருக்கும்.

பிராமணர்கள் அதைச் செய்யாதது ஏன்?

கடவுளின் பிரதிநிதிகளான[பிராணப் பிரதிஷ்டை மந்திரம் கற்றவர்கள், தங்களுக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றிக்கொள்ளக் கூடாது என்பது கடவுள் விதித்துள்ள நிபந்தனை] தங்களைக் காட்டிலும் மேம்பட்ட நிலையைச் சூத்திரர்கள் பெறுதல் கூடாது என்ற பொறாமைக் குணம் அதற்கான காரணம் ஆகும்.

நரேந்திர மோடி பிராமணன் அல்ல; ஒரிஜினல் சூத்திர இனத்தவர் ஆவார்.

பிராமணர்களுக்கு உள்ள பொறாமைக் குணம் சூத்திரரான மோடிக்குக் கொஞ்சமும் இல்லை என்று நம்பலாம்.

இந்த நம்பிக்கையுடன், கடவுளின் பிரதிநிதியான மோடி அவர்களிடம் நாம் மிகு பணிவுடன் வைக்கும் வேண்டுகோள்:

“இந்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களின் முழு நம்பிக்கைக்குரிய அமைச்சரிடம் ஒப்படையுங்கள்; நாள்தோறும், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் உடம்புகளுக்குள் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தை ஓதி ஓதி ஓதி... அவர்கள் அத்தனைப் பேரையும் தெவீகத் தன்மை பெற்றவர்களாக மாற்றுங்கள்.”

வாழ்க மோடி! வளர்க அவரால் தெவீகத் தன்மை பெறுவோர் எண்ணிக்கை!!

ஊடக மூடன்கள்!!!

யோத்தியில், கோடானுகோடி செலவில் கோயில் கட்டி, ‘பிராண பிரதிஷ்டை செய்து, கற்சிலைக்கு[பால ராமன்] உயிர் கொடுத்தார்[22.01.2024[என்று சொல்லப்படுவது] பிரதமர் மோடி என்பது உலகறிந்த செய்தி.

23.01.2024ஆம் நாள் இந்தக் கோயிலைப் பார்வையிட[பெரும்பான்மையோர் கோயிலை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்] பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது.....

ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, கருவறைக்குள் இருக்கும் பால ராமரை நோக்கிச் சென்றது. காவலர்கள் வரவே, எந்தப் பிரச்சினையும் செய்யாமல் அது கிழக்கு வாசல் வழியாக வெளியேறியது என்பது ஊடகங்கள் பலவற்றில் வெளியான செய்தி.

ராமனின் ஆகச் சிறந்த பக்தனான ஆஞ்சநேயன்[ராமாயணக் கதை>கதைதான்], அவன் பரம்பரையைச் சார்ந்த குரங்கு வடிவில் ராமனைத் தரிசிக்க வந்தான் என்கிறான்கள் ஊடகக்காரன்கள்[‘ராமரைக் காண வந்த குரங்கு! அயோத்தியில் பரபரப்பு’ என்றே தலைப்பு கொடுத்துச் செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்].

[வாழைப் பழம் என்றால் குரங்குக்கு உயிர். மனிதர் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில்கூட, கொஞ்சமும் அஞ்சாமல், ஒருவர் பழம் வைத்திருந்தால் அதைத் தட்டிச் செல்லும் துணிவு இந்தக் குரங்குகளுக்கு உண்டு என்பது நாம் அறிந்ததே].

ராமன் சிலையின் முன்னால் குவிந்து கிடந்த வாழைப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்திருக்க வேண்டும் இந்தக் குரங்கு.

இந்த மிகச் சாதாரண உண்மையைக்கூட அறிந்திராத ஊடக முட்டாள்கள் மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்.

வால்மீகியின் ‘ராமாயணம்’ என்னும் நூறு சதவீதம் கற்பனைக் கதையில் இடம்பெற்ற ஆஞ்சநேயன் என்னும் குரங்கைக் கடவுளாக நம்பவைத்து, லட்சக்கணக்கான[கோடிக்கணக்கான?] மக்களை மூடர்கள் ஆக்கியது போதாதென்று, இப்படியான பொய்களை[குரங்கு, ராமனைக் காண வந்தது]ப் பரப்புவதன் மூலம், மூடர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையே தொழிலாகக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள்[பெரிய கூட்டமே உள்ளது] இவர்கள்.

இவர்களை நம்மைப் போன்ற சாமானியர்கள் கண்டித்தால் போதாது; பொதுமக்கள் கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால், கடும் போராட்டங்களிலும் ஈடுபடுதல் மிக மிக அவசியம்.

                                          *   *   *   *   *

https://m.dinamalar.com/detail.php?id=3533877

https://www.puthiyathalaimurai.com/india/a-monkey-suddenly-entered-of-ayodhya-ram-temple

https://tamil.abplive.com/news/india/monkey-enters-ayodhya-ram-temple-sanctum-sanctorum-devotees-see-hanuman-symbolism-163621

https://mediyaan.com/hanuman-came-to-visit-lord-rama-in-ayodhya/

https://www.dinamani.com/india/2024/jan/24/monkey-enters-ram-temple-sanctum-sanctorum-4144343.html

https://tamil.oneindia.com/news/india/hanuman-entry-monkey-entered-ram-mandirs-sanctum-sanctorum-says-shri-ram-janmbhoomi-teerth-kshet-576973.html

https://www.youtube.com/watch?v=fEk-re5hPQk