அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 25 ஜனவரி, 2024

ஊடக மூடன்கள்!!!

யோத்தியில், கோடானுகோடி செலவில் கோயில் கட்டி, ‘பிராண பிரதிஷ்டை செய்து, கற்சிலைக்கு[பால ராமன்] உயிர் கொடுத்தார்[22.01.2024[என்று சொல்லப்படுவது] பிரதமர் மோடி என்பது உலகறிந்த செய்தி.

23.01.2024ஆம் நாள் இந்தக் கோயிலைப் பார்வையிட[பெரும்பான்மையோர் கோயிலை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்] பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது.....

ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, கருவறைக்குள் இருக்கும் பால ராமரை நோக்கிச் சென்றது. காவலர்கள் வரவே, எந்தப் பிரச்சினையும் செய்யாமல் அது கிழக்கு வாசல் வழியாக வெளியேறியது என்பது ஊடகங்கள் பலவற்றில் வெளியான செய்தி.

ராமனின் ஆகச் சிறந்த பக்தனான ஆஞ்சநேயன்[ராமாயணக் கதை>கதைதான்], அவன் பரம்பரையைச் சார்ந்த குரங்கு வடிவில் ராமனைத் தரிசிக்க வந்தான் என்கிறான்கள் ஊடகக்காரன்கள்[‘ராமரைக் காண வந்த குரங்கு! அயோத்தியில் பரபரப்பு’ என்றே தலைப்பு கொடுத்துச் செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்].

[வாழைப் பழம் என்றால் குரங்குக்கு உயிர். மனிதர் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில்கூட, கொஞ்சமும் அஞ்சாமல், ஒருவர் பழம் வைத்திருந்தால் அதைத் தட்டிச் செல்லும் துணிவு இந்தக் குரங்குகளுக்கு உண்டு என்பது நாம் அறிந்ததே].

ராமன் சிலையின் முன்னால் குவிந்து கிடந்த வாழைப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்திருக்க வேண்டும் இந்தக் குரங்கு.

இந்த மிகச் சாதாரண உண்மையைக்கூட அறிந்திராத ஊடக முட்டாள்கள் மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்.

வால்மீகியின் ‘ராமாயணம்’ என்னும் நூறு சதவீதம் கற்பனைக் கதையில் இடம்பெற்ற ஆஞ்சநேயன் என்னும் குரங்கைக் கடவுளாக நம்பவைத்து, லட்சக்கணக்கான[கோடிக்கணக்கான?] மக்களை மூடர்கள் ஆக்கியது போதாதென்று, இப்படியான பொய்களை[குரங்கு, ராமனைக் காண வந்தது]ப் பரப்புவதன் மூலம், மூடர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையே தொழிலாகக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள்[பெரிய கூட்டமே உள்ளது] இவர்கள்.

இவர்களை நம்மைப் போன்ற சாமானியர்கள் கண்டித்தால் போதாது; பொதுமக்கள் கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால், கடும் போராட்டங்களிலும் ஈடுபடுதல் மிக மிக அவசியம்.

                                          *   *   *   *   *

https://m.dinamalar.com/detail.php?id=3533877

https://www.puthiyathalaimurai.com/india/a-monkey-suddenly-entered-of-ayodhya-ram-temple

https://tamil.abplive.com/news/india/monkey-enters-ayodhya-ram-temple-sanctum-sanctorum-devotees-see-hanuman-symbolism-163621

https://mediyaan.com/hanuman-came-to-visit-lord-rama-in-ayodhya/

https://www.dinamani.com/india/2024/jan/24/monkey-enters-ram-temple-sanctum-sanctorum-4144343.html

https://tamil.oneindia.com/news/india/hanuman-entry-monkey-entered-ram-mandirs-sanctum-sanctorum-says-shri-ram-janmbhoomi-teerth-kshet-576973.html

https://www.youtube.com/watch?v=fEk-re5hPQk