எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 22 ஜூன், 2023

செயற்கைக் கோழி இறைச்சி விற்பனைக்கு! செயற்கைத் தாய்ப் பால்.....?

உலக அளவில் இறைச்சி உண்போர் அதிகரித்துவரும் நிலையில், விலங்கு, பறவை முதலான உயிரினங்களைக் கொன்று உண்பதற்கும் எதிர்ப்புத் தெரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.

இந்நிலையில்.....

அமெரிக்காவில் விலங்குகளின் உயிரணுக்களிலிருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது என்பது அண்மையில் வெளியான மிக நல்ல ஒரு செய்தி.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கை இறைச்சியை விற்பனை செய்வதற்கு அமெரிக்க உணவு&மருந்துகள் நிர்வாகம் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்னொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால்,

சிங்கப்பூரில் கோழியின் உயிரணுவிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை இறைச்சி, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம்.

விரைவில், மரபணுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றி, பாம்பு, மீன், மான் என்று உண்ணுவதற்கு ஏற்ற அனைத்து உயிரினங்களின் இறைச்சிகளும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால்.....

இவையெல்லாம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நம் மனிதக் குழந்தைகளுக்கான தாய்ப்பால் தயாரித்து விற்பனை செய்யப்படுவது மிக மிக முக்கியம்.


தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் மட்டுமல்லாமல், பாலிருந்தும் குழந்தைக்குப் பால் கொடுத்தால் கட்டுக் குலையும்; அழகு சிதையும் என்று தீராத கவலைக்கு உள்ளாகும் அன்னையர் குலத்துக்கும் இது வரப்பிரசதமாக அமையும்.

எனவே, அமெரிக்கா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல், செயற்கை உணவுகள் தயாரிக்கவுள்ள பிற நாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை!

[நன்றி: மாலைமலர்]

மூச்சுப் பயிற்சியும் ‘மோடி’[யைப்] பிரபலப்படுத்தும் யோகா பயிற்சியும்!!!


தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, மூச்சுக் காற்றைச் சீராக இழுத்துவிடுவது, உடல் நலத்திற்கான சிறந்ததொரு பயிற்சியாகும்.

இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் சுறுசுறுப்பாக இயங்க இது உதவும்.

தினமும் இப்பயிற்சியைச் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்.

மூச்சுப் பயிற்சியால், ரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் மிகையான கொழுப்புகளும், ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகளும் கரைகின்றன.

மூளைவரை உயிர்க்காற்று[பிராணவாயு] பரவுகிறது. அதன் மூலம் மூளை சிறப்பாகச் செயல்படுகிறது.

மூச்சுப் பயிற்சியுடன் வேறு பல உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வதைத்தான் ‘யோகா’ என்கிறார்கள்.

வேறு பயிற்சிகள் எனப்படுவது, அமர்ந்த கோலத்திலோ, நின்ற நிலையிலோ கால்களை நீட்டி மடக்கியும், கைகளை உயர்த்தியும் இறக்கியும், முழு உடம்பையும் வளைத்தும் நெளித்தும் பக்கவாட்டுகளில் சுழற்றியும் செய்யப்படுபவை.

இவை உடற்பயிற்சிகளே தவிர, மூச்சுப் பயிற்சிக்கும் இவற்றிற்கும் சம்பந்தமே இல்லை.

உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்[உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள்] மூச்சுப் பயிற்சியை மட்டும் செய்யலாம்.

தேவை எனின், அளவான உடற்பயிற்சியும் செய்யலாம். அதாவது, இரண்டையும் தனித் தனியாகவோ இணைத்தோ செய்யலாம். உடம்புக்குத் தீமையும் விளைவிக்கிற யோகாவைத் தவிர்க்கலாம்.

"தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மனப் பதற்றம், மனச் சோர்வு போன்றவை நீங்குகின்றன” என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

இவற்றைப் பெறுவதென்பது ‘மனப் பயிற்சி’யால் மட்டுமே சாத்தியமாகும்.

மூச்சுப் பயிற்சி, மனப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் வேறு வேறானவை.

இவற்றாலும், நல்ல உணவுண்ணுவதாலும், வேறு நல்ல பழக்கவழக்கங்களாலும் விளைகிற அத்தனை நன்மைகளும் யோகா பயிற்சியால் கிடைக்கிறது என்று பரப்புரை செய்வது விரும்பத்தகாத செயலாகும்.

இந்தியப் பிரதமர் மோடி அதைத்தான் செய்கிறார்.

இவர் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில்[நியூயார்க், ஐ,நா.தலைமையக வளாகம்] பயிற்சி முடிவில்.....

‘ஓம்’ மந்திரமும் சமஸ்கிருத சுலோகங்களும் ஒலிபரப்பப்பட்டனவாம்.

இவற்றுக்கும், இவர்களால் பரப்புரை செய்யப்படும் யோகா பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

சமஸ்கிருதம் தேவ பாஷை. அதிலுள்ள மந்திரங்களும் சுலோகங்களும் சக்தி வாய்ந்தவை என்று மக்களனைவரையும் நம்ப வைப்பதற்கான சூழ்ச்சி இது என்பதே நம் எண்ணம்.

* * * * *
***பெருமளவில் கொண்டாடப்படும் இந்த யோகாவால் கெடுதல்களும் உண்டாகின்றன. அவற்றுள் சில:

//அறுவைச் சிகிச்சை செய்து குணமடைபவர்களுக்கு, அல்லது காயங்களில் இருந்து மீண்டுவருபவர்களுக்கு யோகா தீங்கு விளைவிக்கிறது[குணமடைதலைத் தடுக்கிறது].

அஷ்டாங்க யோகா பயிற்சியாளர்களில் ஈடுபட்டவர்களில் 62 சதவீதம் பேர் தசை&எலும்புக் காயங்களால் அவதிப்படுவதுண்டு.

யோகா, நன்மைகளுக்கிடையே ரத்த அழுத்தம், முதுகுக் காயங்கள், தசைப் பிளவுகள், கிளவ்கோமா தொடர்பான பிரச்சினைகள், பக்கவாதம், நரம்புச் சேதம், கடுமையான காயங்கள் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆதாரம்: https://www.javatpoint.com/advantages-and-disadvantages-of-yoga//