அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

காலை உணவுத் திட்டம்... ‘மலம் கக்கும்’ தினமலர்க்காரனைக் கைது செய்க!!!

மூன்று வேளையும் உணவுண்ண வழியில்லாத உழைக்கும் வர்க்கத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைக்கத்தான், அவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பெருந்தலைவர் காமராசரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவர்களுக்குக் ‘காலை உணவு’ வழங்குவதையும் வழக்கமாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதன் மூலம் கல்வி கற்க வரும் உழைப்பாளிகள் குடும்பத்துப் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி.

மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைக் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஊடகங்களும் பாராட்டுகின்றன,

தமிழர் நலனுக்கு எதிரான நச்சுக் கருத்துகளைப் பரப்பும் ‘தினமலர்’ என்னும் ‘தினமலம்’ மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது.

கீழ்க்காண்பது அந்த இதழின் இன்றையத் ‘தலைப்பு’ச் செய்தி:


வீட்டில் உணவுண்ண வசதி இல்லை என்பதால்தான், ஏழைக் குழந்தைகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு.

இந்த உண்மையை மறைத்து, [ஏழைப்]பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் காலை உணவு அளித்துப்[படத்தில் குறிப்பிட்ட சில வரிகள் இடம்பெறவில்லை. கவனக்குறைவாகப் படம் எடுத்தது காரணம்] பள்ளிக்கு அனுப்புவதாகச் சொல்கிறான் இந்த விஷமி.

இது போதாதென்று, வீட்டில் சாப்பிடுவதோடு பள்ளியிலும் சாப்பிடுவதால், அவர்கள் மலம் கழிக்க நேர்ந்து, கக்கூஸ் நிரம்பி வழிவதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறான் இந்தக் கழிசடை.

பாமரர் குடும்பத்துப் பிள்ளைகளுக்குத் தூங்கி எழுந்தவுடம் கக்கூஸ் போகும் பழக்கம் இல்லை என்கிறானா இந்தத் தினசரிப் புளுகன்?

இவனின் இந்தச் செயல் உழைப்பாளி வர்க்கத்தை மட்டுமல்ல, அரசின் ‘காலை உணவு வழங்கல்’ என்னும் உலகம் போற்றும் உயரிய பணியையும் கொச்சைப்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசு, சற்றேனும் தயக்கம் காட்டாமலும், தாமதம் செய்யாமலும் சம்பந்தப்பட்டவர்களை[தினமலர் நிர்வாகம் மண்டலவாரியாக, ‘கோவை, திருச்சி, மதுரை...’ என்று பிரிக்கப்பட்டுள்ளது] கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது மிக மிக அவசியமாகும்.

புதன், 30 ஆகஸ்ட், 2023

ரத்த வகையும் நோய் அறிதலும்


ரத்த வகைகளுக்கும் பல்வேறு நோய்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. 

கண் நிறத்தைப் போலவே, இரத்த வகையும் பெற்றோரிடமிருந்து மரபணு ரீதியாக அனுப்பப்படுகிறது. இரத்த வகைகள் சில ‘ஆன்டிஜென்’களின்[உடலினுள் நுழைந்து நோயை விளைவிக்கும் பொருள். இப்பொருளை எதிர்ப்பதற்கான தற்காப்புப் பொருள்களை வழக்கமாக உடல் தன்னுள் உண்டுபண்ணுகிறது] இருப்பு அல்லது இல்லாமையால் தீர்மானிக்கப்படுகின்றன, 

இதய நோய்:

O இரத்த வகைகளுக்கு கரோனரி இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. காரணம் அறியப்படவில்லை. .

நினைவாற்றல்:

AB இரத்த வகை உள்ளவர்கள் மற்ற இரத்த வகைகளைக் கொண்டவர்களை விட, சிந்தனை மற்றும் நினைவாற்றல் குறைபாடுகள் அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். 

ஆயுட்காலம்:

O வகை இரத்தம் இருந்தால் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் நோய் அபாயம் குறைவாக இருப்பது காரணமாகும். 

வயிற்றுப் புற்றுநோய்:

A, AB மற்றும் B இரத்த வகைககளைக்[குறிப்பாக A]  கொண்டவர்களை இந்த நோய் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது.

மன அழுத்தம்:

மன அழுத்தம் உடலின் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது, இது மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. A வகை இரத்தம் உள்ளவர்கள் அதிக கார்டிசோலைக் கொண்டுள்ளனர், இதனால், திக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

கணையப் புற்றுநோய்:

A, AB அல்லது B வகை உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கான ஆபத்து அதிகம். A மற்றும் B வகைகளில் உள்ள மூலக்கூறுகள் குடலில் H. பைலோரி பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றன. இதனால் கணையப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மலேரியா:

O ரத்த வகையினரைக் கொசு கடிக்கும்போது மலேரியா வரலாம். அதிர்ஷ்டவசமாக, O இரத்த வகை இருந்தால், ஒட்டுண்ணி உயிரணுக்களுடன் இணைவது கடினம்.

புண்கள்:

பெப்டிக் அல்சர் என்பது வயிற்றில் அல்லது மேல் குடலின் புறணியில் வளரும் வலி மிகுந்த திறந்த புண்கள் ஆகும். அவை இரத்த வகை O வில் அடிக்கடி நிகழ்கின்றன.

நீரிழிவு நோய்:

வகை 2 நீரிழிவு இரத்த வகை A மற்றும் B உடையவர்களில் அடிக்கடி நிகழ்கிறது. இருப்பினும், ஏன் என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சி தேவை.

கருவுறுதல்:

O வகை இரத்தத்தைக் கொண்ட பெண்களின் கருமுட்டைகள் ஆரோக்கியமானவையாக இருக்கும். ஏன் என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

ருமேடிக் நோய்:

ருமேடிக் நோய் என்பது மூட்டுகள், இணைப்பு திசு, தசைநாண்கள், குருத்தெலும்பு ஆகியவற்றில் வலியை ஏற்படுத்தும் 200க்கும் மேற்பட்ட நிலைகளின் குழுவாகும்.  A மற்றும் O இரத்த வகைகளில் இந்தப் பாதிப்பு அதிகம் காணப்படலாம்.

இரத்தக் கட்டிகள்:

வீனஸ் த்ரோம்போம்போலிசம்(VTE) என்பது நரம்புகளில்[ரத்தக் குழாய்கள்] ரத்தம் உறைவதைக் குறிக்கிறது. A, B அல்லது AB இரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு VTE ஆபத்து அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

பக்கவாதம்:

AB இரத்த வகை இருந்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம். மற்ற வகைகளைவிட இது அதிக அளவில் ரத்தத்தை உறைய வைக்கிறது.

லூபஸ்:

லூபஸ் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும், இது உடல் முழுவதும் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. மற்ற இரத்த வகைகளைவிட A மற்றும் B இரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

குடல் அழற்சி நோய்:

இரத்த வகை O உடையவர்களுக்கு ‘க்ரோன்’[அழற்சி] நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

இரத்தப்போக்கு:

கார் விபத்து போன்றவற்றால் படுகாயம் ஏற்படும்போது அதிக அளவு இரத்தத்தை இழக்கும் நிலை உருவாதல். O இரத்த வகையினருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

ஆதாரங்கள்: (மெடிக்கல் நியூஸ் டுடே), (வெப்எம்டி), (ஹெல்த்லைன்)

https://www.msn.com/en-in/health/medical/this-is-how-your-blood-type-can-affect-your-health/ss-AA13BFjq?ocid=msedgdhp&pc=U531&cvid=850aa4beb7b74371bbd5102a336c061e&ei=24

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

பெருகுது ‘கள்ள உடலுறவு’க் கொலைகள்! அதிகரிக்குமா [ஆண்]விபச்சாரர் எண்ணிக்கை?!

                                      [The Untold Story Of The Male Prostitutes Of Ancient Greece]

அவர் கட்டட மேஸ்திரி[இது குறித்த காவல்துறை விசாரணை நிலுவையில் இருப்பதால் ஊரும் பெயர்களும் தவிர்க்கப்படுகின்றன. கீழே உள்ள முகவரி* வாயிலாக விரிவான செய்தியை அறிந்திடுக] திருமணமானவர், இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள்.

மனைவிக்கு ஒரு பேக்கரியில் வேலை. உடன் வேலை பார்த்த ஒருவருடன் அவ்வப்போது கள்ள உடலுறவுச் சுகம் அனுபவிப்பதை வழக்கமாக்கியுள்ளார்.


இது விசயம் அவருக்கு[கணவர்]த் தெரிந்தபோது, மனைவியைக் கண்டித்ததுடன் வேலைக்குச் செல்லவும் தடை விதித்தார்.


ஆனாலும், அந்தப் பெண் கள்ள உறவாளனுடன் பேசியில் உரையாடுவது தொடர்ந்தது. உடலுறவு இன்பம் அனுபவிக்காத நிலை தொடர்ந்ததால் அந்தச் சுகத்துக்காக இருவரும் ஏங்கிக் கிடந்தார்கள்.


‘அது’ இல்லாமல் வாழ்வது இயலவே இயலாது என்பதை உணர்ந்த இருவரும், ‘அவர்’ஐக் கொலை செய்திடத் தீர்மானித்தார்கள்.


திட்டம் தீட்டினார்கள்; தீர்த்துக்கட்டினார்கள்.


இது அண்மை நிகழ்வு.


இதைப்போலவே, ஒரு பெண் கள்ள உறவுக்காரனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வது என்பது சமுதாயத்தில் அடிக்கடி இடம்பெறும் அவல நிகழ்வாக உள்ளது.


தாலி கட்டியவனின் உயிருக்கு உலை வைக்கிற ஒரு பெண்ணுக்கு[கணவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல என்பது வேறு விசயம்], குழந்தைகளின் எதிர்காலம் உட்பட, அதன் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியும்தான்[தண்டனையிலிருந்து தப்புகிறவர்களும் உள்ளனர்].


அப்புறம் ஏன், இப்படியான கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்?


‘அந்த’ நினைப்பு தரும் போதையில் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் அறிவை அறவே இழப்பதுதான் காரணம்.


கணவனிடம் பெற்ற காம சுகம் கட்டுபடி ஆகாமல் வேறு ஒருவனிடம் கூடுதலாகப் பெற்றுச் சுகித்த அனுபவமும் காரணமாகும்.


ஆணாக, இருந்தால், அக்கம்பக்கத்தவருக்குத் தெரியாமல் விலைமகளிர் விடுதிக்குப் போய்த் தாபம் தணித்துத் திரும்புகிறான்.


நம் சமூகச் சூழலில் ஒரு பெண்ணுக்கு இது சாத்தியமே இல்லை.


தப்புச் செய்ய விரும்பாதவர்கள் அடக்கி அடக்கி வைத்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது அரைப் பைத்தியமாக வாழ்நாளைக் கடத்துகிறார்கள்.


இப்படியாக, இம்மாதிரிச் சம்பவங்கள் குறித்து நிறையப் பேசுகிறோம்; எழுதுகிறோம். பயன் ஏதும் விளைகிறதா எனின், இல்லை என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது.


எனவே, இனியும் இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே புத்திசாலித்தனமான செயலாகும்.


சிறியேனின் சிறுமதியில் உதித்த சில வழிமுறைகள்:


1.சிறு வயதிலிருந்தே, கற்பு, கலாச்சாரம் என்றெல்லாம் போதிப்பதை நிறுத்துவது.


2.ஒழுக்க விதிகளைத் தளர்த்துவது[இயல்பாகவே மனைவியின் தவறான நடத்தைகளைக் கண்டுகொள்ளாத கணவர்கள் உள்ளனர் சில அப்பாவிப் பெண்களைப் போலவே]


3.‘விலைமகன்கள்’ விடுதிகளுக்கு அனுமதி[நெறிமுறைகளுக்கு இணங்க] அளிப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்னும் கொள்கையை அரசுகள் கடைபிடிப்பது.


இது விசயத்தில், கீழ்க்காணும் உலக நாடுகள் சிலவற்றை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.


*Caribbean countries ஜமைக்கா, பாரொஅடாஸ், டொமினிகன் குடியரசு போன்ற தீவுகள் அந்தத் தொழிலுக்குப் புகழ் பெற்றவை. ஆண் விபச்சாரர்களும் அங்கு உள்ளனர்.


*Phillippines இல் 80,000 விபச்சாரர்கள் ‘தொழில்’ செய்கிறார்கள். https://www.newssensetn.com/ampstories/world-news/10-sex-tourism-destinations-around-the-world


*சீனாவில் ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 500(5000?) வாடகையில் விலைமகன்களை ஏற்பாடு செய்யும் ‘தொழில்’ நிறுவனங்கள் உள்ளன[தேடலின் மூலம் இன்னும் அதிக விவரங்களப் பெறலாம்].


*முகநூலில் ‘நான் விபச்சாரன்’ என்று தலைப்பிட்டு, தளத்தில் இணையுமாறு அழைக்கும் விலைமகன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது[*முகவரி கீழே].


***உயிர் முக்கியமா, ஒழுக்கம் முக்கியமா என்னும் கேள்வி எழும்போது, வருங்காலத்தில் நம் மக்கள் எதைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொருத்தது, விபச்சாரரின்[விபச்சாரிகளும்] எண்ணிக்கை கூடுவதும் குறைவதும்!


எது எப்படியோ, இது விசயத்தில், மாநில மத்திய அரசுகள் அதிகக் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்று தோன்றுகிறது.

* * * * *


*https://www.maalaimalar.com/news/state/a-young-woman-who-killed-her-husband-along-with-a-blackmailer-made-a-sensational-confession-to-the-police-655344


*https://www.facebook.com/public/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D




திங்கள், 28 ஆகஸ்ட், 2023

இச்சையுடன் “இச்... இச்... இச்”... நன்மைகளும் தீமைகளும்!

முத்தம் ஆசை, பாசம் போன்றவற்றின் உன்னதமான வெளிப்பாடு.

இதனால் ஏராள நன்மைகள் உண்டு; தீமைகளும் உள்ளன.

மூளையில் உள்ள டோபமைன்[Dopamaine] என்னும் சுரப்பிதான் நம்மை மகிழ்ச்சியாக இருக்கத் தூண்டுகிறது. மன அழுத்தம் இதன் இயக்கத்தைப் பாதிப்பதால், நாம் மன அழுத்ததிற்கு உள்ளாகாமல் இருப்பது மிக அவசியம் அல்லவா? 

அந்த மன அழுத்தம் முத்தமிடுவதால் குறைகிறதாம். ஆகவே முத்தமிடுவீர் என்கிறார்கள் முத்த ஆராய்ச்சியாளர்கள்..

யார் யாருக்கெல்லாம் எங்கெங்கெல்லாம் என்பது அவரவர் வயதையும், விருப்பு வெறுப்புகளையும் பொருத்தது.

உடம்பின் பிற உறுப்புகளின் தசைகளைப் போல முகத்தின் தசைகள் இயங்குவதற்கான வாய்ப்பு, உணவுண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிகுதியும் அமைவதில்லை. எனவே, முத்தமிடுதல் முகத் தசைகளுக்கான சிறந்த பயிற்சியாகும். அதன் மூலம் முகத் தசைகள் சுருங்காமலும் தொங்கிப்போகாமலும்  இருக்கும் என்பதால், முகம் பொலிவு குன்றாமலிருக்கும்.

உமிழ்நீரின் பயன்கள் கணிசமானவை. வாயைச் சுத்தம் செய்வதோடு,  கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துகள் உமிழ்நீரில் உள்ளன.

ஒரு நல்லிரவு முத்தம் ஆக்ஸிடாஸின் எனப்படும்  காதல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெற முடியுமாம்.


ஒரு பிரிட்டிஷ் ‘படுக்கை நிறுவனம்’[படுக்கும் முறைகளைச் சொல்லித்தரும் நிறுவனமா?!] நடத்திய கருத்துக்கணிப்புக்குப் பதிலளித்தவர்களில் 70% பேர் உறங்கச் செல்வதற்கு முன்பு முன் தங்கள் கூட்டாளிகளை முத்தமிடுவதால் நன்றாகத் தூங்குவதாகத் தெரிவித்தனர்.


முத்தம், மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


உடற்பயிற்சி செய்கிற அளவுக்கு இல்லை என்றாலும், முத்தமிடுதல், கணிசமான அளவுக்குக் கலோரிகளைக் குறைக்கிறது.


“இச்” கொடுப்பதில் இப்படியான பல நன்மைகள் இருந்தாலும், கவனக்குறைவாக இதைச் செய்வதால் பல தீமைகளும் விளையும் என்கிறார்கள் மூத்த ‘முத்த’ஆராய்ச்சியாளர்கள்.


அவைகளில் குறிப்பிடத்தக்கவை:


வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மறக்கவே கூடாதது. தவறினால், உமிழ்நீர் மூலம் கிருமிகள் பரவிட வாய்ப்புள்ளது. எனவே, முத்தப் பரிமாறலுக்குப் பின்னரும் வாயை நன்கு கொப்பளிப்பது நல்லது[புணர்ச்சிக்குப் பிறகு பிறப்புறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல].


வாயில் புண்கள் இருந்தால் முத்தமிடுதல் கூடாது.


மோனோநியூக்ளியோசிஸ், கோவிட்-19, எபோலா, ஜிகா போன்ற சில மோசமான வைரஸ்கள்  உமிழ்நீர் மூலம் பரவும்.


இருவரில் ஒருவருக்கு உண்ணும் உணவில் ஒவ்வாமை இருந்தால், அதை ‘அந்த’ நேரத்தில் உண்ணாமலிருத்தல் வேண்டும். அவ்வகை உணவை உண்டிருந்தால், முத்தமிடுவதற்கு 16 முதல் 24 மணி நேரம் காத்திருத்தல்[உருப்பட்ட மாதிரிதான்!] மிக மிக முக்கியம்.


குறைந்தது 10 வினாடிகள் நீடிக்கிற முத்தத்தில், சராசரியாக 80 மில்லியன் பாக்டீரியாக்கள் கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். முத்தமிடுவதால் ஏராளமான கிருமிகள் பரவக்கூடும், எனவே, அவர்களுக்கு முத்தம் தரும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

                                              

                                          *   *   *   *   *


குறிப்பு: இதெல்லாம் குளிர்ப் பிரதேசவாசிகள் அவ்வப்போது உடம்பைச் சூடேற்றுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். நம் நாடு வெப்பம் மிகுந்தது. கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ‘நச நச’ வேர்வை முகம் சுழிக்க வைக்கும்; உதட்டில் தந்தால் உப்புக் கரிக்கும்.


“அப்புறம் எதுக்கு இந்தப் பதிவு?”ன்னு கேட்குறீங்களா?


வேறென்ன, நல்ல ‘சரக்கு’ எதுவும் கைவசம் இல்லை என்பதே அடியேன் பணிவுடன் உங்கள் முன்வைக்கும் பதில்!



https://www.msn.com/en-gb/health/familyhealth/the-surprising-side-effects-of-kissing/ss-AA1ftOXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=371b0c019f65402dacb01e17f1f84293&ei=18#image=2

சனி, 26 ஆகஸ்ட், 2023

ஆணின் ‘விரைவீக்கம்’ நோயும் பிரபல எழுத்தாளினியின் ‘கால்வேக்காடு’ சிறுகதையும்!!!

ஓர் அழகான பெண்; இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். அவரின் கணவர் ‘விரை வீக்கம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்[இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்].

தேடிப்போய் உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர் என்பதால் ஊராரின் நன்மதிப்பைப் பெற்றவர், கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்.

கதையைத் தொடர்வதற்கு முன், கதையின் ‘உள்ளடக்கம்’ குறித்துக் கொஞ்சம் அலசிவிடுவோம்.

அந்தப் பெண்ணின் மீது நீண்ட நாட்களாகக் கண்[இரண்டு கண்ணும்தான்] வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி, அவருடன் தனிமையில் இருக்கும்போது ஒரு கேள்வி கேட்கிறான். அது.....

“அம்மா, அய்யாவுக்கு அடி பெருத்திருக்கே[விரை வீக்கம்]. உங்களோடு எப்படித் தாம்பத்தியம் வெச்சிக்கிட்டாரு? எப்படி ரெண்டு குழந்தைகளைப் பெத்துகிட்டீங்க?”

அவன் இப்படிக் கேட்டவுடன் அந்த அம்மா, “பொறுக்கி நாயே...” என்று சீறிக்கொண்டே கால் செருப்பைத் தேடியிருப்பார், அல்லது சரமாரியாக அவன் கன்னங்களில் அறைந்திருப்பார், அல்லது அவன் புட்டத்தின் மீது எட்டி உதைத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்.

இந்தக் கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என்பதோடு, வெறுமனே வேதனைப்படுகிறார் அந்தப் பெண். குழந்தைகளைப் பெற்ற பிறகே தன் கணவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை[அந்தப் பொறுக்கி நாய்க்கு இது தெரியாமல்போனது எப்படி?] நினவுகூர்வதோடு, கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது.

அடுத்து வரும் சம்பவங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

கதையின் முடிவும் எதார்த்தமானதாக இல்லை.

பண்ணைக்கார அம்மாவின் ரவிக்கையையும் பாடியையும் திருடிச் சென்றதோடு, தன் வீடு தேடிவந்து தன்னோடு படுத்துவிட்டுச் செல்வதாக ஒரு புரளியைப் பரப்புகிறான் அந்த தினக்கூலி[பெயர் மாணிக்கம்].

ஊரும் அதை நம்புகிறது.

பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

பஞ்சாயத்தில், மாணிக்கத்தை நெருங்கி அவன் முகத்தில் காறித் துப்பிய அந்த அம்மா[தங்கம்மா] “இப்படியெல்லாமா கதை கட்டுவே... என் சேலையைத் திருடத் தோணலையா?” என்கிறார்.

பஞ்சாயத்தில் இப்படிக் கேட்ட தங்கம்மா அன்று அவன் அசிங்கமாகக் கேள்வி கேட்டபோது ஏன் மௌனம் சாதித்தார் என்பதாகக் கேள்வி ஏதும் கேட்டுவிடாதீர்கள். 

ஏனென்றால்.....

இந்தக் கதையை எழுதியவர் என்னைப் போன்ற ஒரு கத்துக்குட்டிக் கதாசிரியர் அல்ல; பிரபல எழுத்தாளர் ‘இந்துமதி’யாக்கும்!

கதையை வெளியிட்டது உலகத் தமிழ் வார இதழ்களில் ‘நம்பர் 1’ ஆகத் திகழும் ‘குமுதம்’(30.08.2023)ஆக்கும்!!

ஒரு கட்டத்தில், பஞ்சாயத்தைப் புறக்கணித்த தங்கம்மாவின் கணவர் அவரை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.

முக்கியக் குறிப்பு:

‘அவரது பிறப்புறுப்பு[விரை] வீங்க ஆரம்பித்தது. ... மகோதரம் என்றார்கள். புட்டை என்று பேர் சொன்னார்கள். பார்க்காத வைத்தியம் இல்லை. குணமாகவில்லை என்று விரை வீக்கம் நோய் குறித்து விளக்கம் தந்திருக்கிறார் இந்துமதி அம்மையார் அவர்கள்.

அவருக்காகவும், குமுதம் வரதராசனுக்காகவும் விக்கிப்பீடியா தரும் இந்நோய் குறித்த குறிப்பு இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து, விரை வீக்க அறுவைச் சிகிச்சை குறித்த ஒரு காணொலி இணைக்கப்பட்டுள்ளது[கொசுறாக இன்னொன்று>கண்டிப்பாக மணமானவர்களுக்கு மட்டும்]

//கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக்கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது. யானைக்கால் நோய் (Filariasis) நோயினால்கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு.

விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று//


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

கண் முன்னே மனைவியின் கள்ள உடலுறவு! கோயிலுக்குப் போன அப்பாவிக் கணவன்!!


நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளையில் இடம்பெற்ற, உலகம் கண்டிராத ஓர் அபூர்வ நிகழ்வு இது.


* * * * *


ட்டிய மனைவி கள்ளக்காமுகனுடன் உடலுறவு கொள்வதைக் கண்ணால் காணும் ஓர் ஆண் மகன் செயல்பாடு என்னவாக இருக்கும்?


இருவரில் ஒருவரையோ, இருவரையுமோ வெட்டிப்போடுவான்.


தன் மனைவி காமுகன் ஒருவனுடன் கள்ளப் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பதைக் கண்ணால் கண்ட பிறகும் இப்படியானதொரு வெறிச் செயலில் ஈடுபடவில்லை ‘அவன்’.


நல்ல மனதும், கடவுள் மீது அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருந்த அந்த அப்பாவி, ஊரிலுள்ள சுடலை மாடன் கோயிலுக்குச் சென்றான்.


உன்னுடைய தீவிர பக்தன் நான். நீ துணையிருப்பதால் நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையுடன்தான் எந்தவொரு காரியத்தையும் செய்தேன். ஒழுக்கமுள்ள நல்ல பெண்டாட்டியை எனக்குக் கொடு என்று உன்னை வேண்டிக்கொண்டுதான் பெண் பார்த்தேன்; ஈஸ்வரி கழுத்தில் தாலி கட்டினேன்.....


இன்னிக்கி அவள் எனக்குத் துரோகம் செய்துவிட்டாள். அவளையும் என்னையும், இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும் படைத்த நீ இதை ஏன் தடுக்கவில்லை? என்று சொல்லிக்கொண்டு[இது நம் அனுமானம்] சுடலை மாடன் சாமி சிலையைச் சேதப்படுத்தினான் அவன்.


அவன் பெயர் ஐயப்பன்[“சாமியே சரணம் ஐயப்பா!”]


இவனைக் கைது செய்யும்படி ஊரிலுள்ள பக்தச்சீலர்கள் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.


காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான் நம் அனுதாபத்திற்குரிய ஐயப்பன்.


கள்ளக்காதலில் ஈடுபட்ட காமாந்தகி கைது; கள்ள உறவுகொண்ட கயவனைத் தேடுகிறது காவல்துறை[இவை ஊடகச் செய்திகள்].


இவனுக்குத்தான் எத்தனை நல்ல உள்ளம்! எத்தனைப் பெரிய ஏமாளிக்குணம்!


இப்படியும் மனிதர்களா!


இவனைப் போன்றவர்கள் இந்த மண்ணில் எத்தனைபேர் இருப்பார்களோ என்றெல்லாம் நினைக்கும்போது மனம் வெகுவாகக் கனத்துப்போகிறது!!


* * * * *

***'நம்பிக்கைத் துரோகம்’ செய்வது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்குக் கைவந்த கலையோ!?


முழுத் தகவலும் அறிந்திடக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.


https://www.dailythanthi.com/News/State/a-wife-who-was-alone-with-a-fake-boyfriend-at-home-the-tragic-decision-taken-by-her-husband-after-witnessing-it-816555


வியாழன், 24 ஆகஸ்ட், 2023

‘காதல் யுகம்!’... சுடுகாட்டில் சுட்ட கதை!!


இறந்துபோன என் நண்பர் சுடுகாட்டில் எரிக்கப்பட்டார். அன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! அதற்கான காரணத்தைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட கதை இது. 

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” -கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

து நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

அன்று ‘ஈமச் சடங்கு’.

“மொட்டை போடணும், வா கீர்த்தி.” -காரியம் செய்பவர் கீர்த்தியை அழைத்தார்.

அவன் சென்றான்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ‘மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்துச் சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

நானும்தான்!

                                     *   *   *   *   *

***2016ஆம் ஆண்டுப் படைப்பு; புதுப்பிக்கப்படாதது! ஹி... ஹி... ஹி!!!

புதன், 23 ஆகஸ்ட், 2023

’பெரிய்ய்ய்ய’ கவலையும் சின்னஞ்சிறுசுகளும்!!!

நான் நகர்ப்புறவாசி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வேலை பார்க்கும் மகன் வீட்டில் அடைக்கலம்.

உறவினர் இல்லத்துத் திருமண விழாவுக்காகப் பிறந்த ஊருக்கு வந்திருந்தேன்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அன்று மாலை சம வயதுக்காரனும், பள்ளியில் உடன்பயின்றவனுமான நண்பன் நவநீதனைச் சென்று பார்த்தேன்.

உடம்பு வெகுவாகத் தளர்ந்துபோய், கவலை அப்பிய முகத்துடன் காட்சியளித்தவனைத் தோள் வருடி, “ஏன் இப்படி ஆகிட்டே?” என்றேன்.

“நீ மட்டுமென்ன, என்னை மாதிரிதான் இருக்கே” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்:

“மருமக மட்டுமல்ல, மகனுமே என்னை ஒரு சுமையாக நினைக்கிறான். ரொம்ப அவசியபட்டாலொழிய என்கூடச் சரியாப் பேசுறதே இல்ல; என்னைக் கண்டுக்கிறதும் இல்ல. எப்போ ஒழிவான்னு இருக்காங்க. தூக்குல தொங்கிடத்தான் விருப்பம். அதுக்கான தைரியம் இல்ல. எது எப்படியோ, வயித்துக்கு மூனு வேளையும் சோறு போட்டுடறாங்க” என்றான் நண்பன்.

கண் கலங்கியிருந்தான். 

அவன் முகத்தை நிமிர்த்தி, “உனக்கு வயசு என்ன?” என்றேன்.

“உன் வயசுதானே எனக்கும். என்பது முடியப்போகுது.”

“அப்பப்போ வயசை நினைச்சுக்கோ. அடிக்கடி நினைச்சா, இன்னிக்கோ நாளைக்கோ எப்போ சாகப்போறமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடுவே. அது தீரவே தீராத பெரிய கவலை. அந்தக் கவலைக்கு முன்னால நீ இப்போ படுறது மாதிரியான கவலையெல்லாம் ரொம்ப அற்பமானதா ஆயிடும்..... 

பெருசாக் கவலைப்படுடா. நான் அதைத்தான் செய்துட்டிருக்கேன்” என்று சொல்லி முடித்ததும் என்னை ஆரத் தழுவிக்கொண்டான் நவநீதன்.

மிகப் பல நாட்களுக்குப் பிறகு, என் மனதுக்குள் இதமானதொரு சுகம் பரவுவதை உணர முடிந்தது.

                   *   *   *   *   *

***முதியவர்களுக்காக ‘பெரிய’ எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஒரு நாளுக்கான திருமணமும் ஒரு முறை[மட்டும்] உடலுறவும்!!!

//ஒரு நாள் திருமணங்கள் சீனாவின் பழம்பெரும் பாரம்பரியத்தில் இல்லை என்றாலும், சமீபத்தில் அத்தகைய திருமணங்கள் அந்நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. திருமணம் ஆகாமல் இளைஞர்கள் இறப்பது ‘சுப நிகழ்வு’ அல்ல என்னும் மூடநம்பிக்கையின் காரணமாக உருவானது இந்த ‘ஒரு நாள்' திருமணம்.

 ஏன் ஒரு நாள் திருமணம்? இந்த திருமணங்களின் பின்னணியில் உள்ள நிபுணர்கள், சீனாவில் பல இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை என்று நம்புகின்றனர். உண்மையில், அந்த இளைஞரின் குடும்பமும் திருமணத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் திருமணமாகாமல் வாழ்கின்றனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், சீனாவில் சிறுவர்கள் திருமணமாகாமல் இறப்பது சுபமாக கருதப்படவதில்லை. ஆகையால், ஒரு நாள் மட்டும் திருமணம் செய்துகொள்ள, தனிமையில் இருக்கும் அடையாளத்தை துடைத்தெறிய, இளைஞர்கள் இதுபோன்ற திருமணம் செய்ய விரும்புவதற்கு இதுவே காரணம். சீனாவின் சில பகுதிகளில், ஒரு இளைஞர் திருமணமாகாமல் இறந்துவிட்டால், கடைசியாக பிரியாவிடை கொடுக்கும் போது திருமணம் செய்துவைக்கப்படும் பாரம்பரியம் உள்ளது.

திருமணத்தன்று மட்டும் அவன் மணமகனாக இருப்பான்.//

மணமகளும் அவ்வாறே. அதன் பிறகு இவன் யாரோ, அவள் யாரோ என்னும் நிலைதான். 

இந்தத் திருமணத்திற்காக, இளைஞர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பணம் செலவழிக்கிறார்களாம். 

பொதுவாக, இளைஞர்களுக்குத் திருமணம் செய்விப்பதில் பெற்றோர்களுக்கு நிறையவே செலவாவதால், பல இளைஞர்கள் மணமாகாமலே வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘ஒரு நாள் திருமணம்’ செய்வதற்குக் காரணமாக அமைந்தது என்கிறார்கள் நிபுணர்கள். இந்நிகழ்வுகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நம் நாட்டில் ‘ஒரு நாள் திருமணங்கள் நடைமுறையில் இல்லை[உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை] என்றாலும், ஒரு பெண் மணமாகாமலே இருந்து இறக்க நேரிட்டால், அவள் கழுத்தில் ஓர் ஆடவனைக்கொண்டு தாலி கட்டும் சடங்கு இன்றளவும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது[தாலி கட்ட ஆட்கள் கிடைப்பது எளிதா என்பது தெரியவில்லை].

ஒரு நாட்டவருக்குரிய நாகரிகம் பிற நாடுகளுக்கும் பரவுவது வெகு இயல்பாக உள்ள நிலையில், சீனர்களிடமுள்ள இந்தத் திருமண முறை நம் நாட்டிலும் பரவினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

ஆனால், இதன் தொடர்ச்சியாக…..

மணமாகாமலே செத்துப்போவது நல்லதல்ல என்னும் மூடத்தனத்துக்கு மக்கள் ஆளாக நேர்ந்தது போலவே, ஒரு நாள் திருமணம் முடிந்து, அன்றிரவே உடலுறவுச் சுகம்[முதலிரவு] அனுபவிக்காமல் செத்துப்போவதும் நல்லதல்ல என்று நம்ப ஆரம்பித்தால்….. 

ஒரு முறை திருமணமும், ஒரு முறை உடலுறவும் கொள்வதற்குப் பெரும் செலவில் பெண்களை ஏற்பாடு செய்ய நேரிடும்.

ஆண்கள், மணமாகாமலோ, முதலிரவுச் சுகம் அனுபவிக்காமலோ சாகக் கூடாது என்பதாக நம்புவது போலவே, ஒரு பெண்ணும் அவ்வாறான நிலையில் சாகக் கூடாது என்று நம்பும் காலம் வருமேயானால் மக்கள் படும்பாடு விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால், நம் மக்களுக்கு நாம் சொல்ல விரும்பும் புத்திமதி….. 

“பையன்களைப் பெற்றெடுக்கும் அளவுக்கு நிறையப் பெண்களையும் பெறுங்கள். ஆண் பெண் எண்ணிக்கை சம விகிதத்தில் இருப்பது மிக மிக அவசியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்பதே!

* * * * *

https://india.postsen.com/world/931912.html

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

செயற்கை நுண்ணறிவும் கிறிஸ்தவர்களின் செயற்கையான கவலையும்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது "கடவுளுடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்றும், சமூகத்திற்கு இதனால் அபாயங்கள் விளையும்" என்று இங்கிலாந்தில் சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்களாம். தேவாலயத்தின் முன்னாள் தலைவர் ஒருவர்[‘வெரி ரெவ் ஆல்பர்ட்’], அவர்களைத் தேற்றும் வகையில் செய்த அறிவிப்புகளை http://www.telegraph.co.uk/ என்னும் தளம் வெளியிட்டிருக்கிறது.

//ஸ்காட்லாந்தின் தேவாலயத்தின் முன்னாள் தலைவர் செயற்கை நுண்ணறிவுக்கு உயிர் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை" என்றும், "மனிதர்கள் பின்பற்றும் வழிபாட்டு முறைகளையும் அது அறியாது” என்றும் கூறினார். 

மேலும்,  “செயற்கை நுண்ணறிவுக்கு(AI) எவரும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அது கடவுளுடன் பேச முடியாது” என்றும் கூறி அவர் கிறிஸ்துவர்களை ஆற்றுப்படுத்தினார்.

திருச்சபையின் மாத இதழில், "வழிபாடு நிகழ்த்துவதற்கான மனமோ, அதற்கான பரிசுத்த ஆவியின் உறுதுணையோ ‘செ.நு. அறிவு’க்கு இல்லை” என்று எழுதினார்.

இங்கே நம்மை வியப்பில் ஆழ்த்துவது, செயற்கை நுண்ணறிவுக்கு உயிர், மனம், புத்திசாலித்தனம் ஆகியவை இல்லாததால் அதனால் கடவுளுடன் பேசுவது சாத்தியப்படாது என்று கூறியிருப்பதுதான்.

*‘செ.நா.நுண்ணறிவு’ கடவுளுடன் பேசுவது உண்மையாக இருந்தால், அதனால் மனித இனத்துக்குப் பலவகை நன்மைகள் ஏற்படுமே தவிர, எவ்வகையில் தீங்கு நேரிடும் என்பது நமக்குப் புரியவில்லை.

*கடவுளின் பெயரால் மதவாதிகள், எப்படியெல்லாம் மக்கள் மீது மூடநம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள் என்பதை அது கடவுளிடம் சொல்லிவிடுமா?

*அதற்குச் சுயமாகச் சிந்திக்கும் அறிவு இருந்தால், கடவுள் இருப்பதாக மதவாதிகள் சொல்வது வெறும் கற்பனை என்னும் உண்மையைப் போட்டு உடைத்துவிடுமா?

*நாத்திகர்களுடன் சேர்ந்துகொண்டு, “கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுள் நம்பிக்கையைப் பரப்புகிறவன் முட்டாள்; நம்புகிறவன் அடிமுட்டாள் என்று பரப்புரை செய்யுமா?

நமக்கான மேற்கண்ட ஐயங்களை மதவாதிகள் போக்குவார்களா?

ஊஹூம்!

வளர்க செயற்கை நுண்ணறிவு! ஒழிக செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை!!

                                  *   *   *   *   *


]

https://cloud.google.com/learn/what-is-artificial-intelligence

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

'புரட்சித் தமிழர்’ வேண்டாம்; எடப்பாடியாருக்குத் ‘தமிழன்’ பட்டம் போதும்!!

‘அதிமுகவின் வீர வரலாற்றுப் பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றதென்பது யாவரும் அறிந்த செய்தி.

இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி, "புரட்சித் தமிழர்" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, "புரட்சித் தமிழர்" பட்டம் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


நமக்கும் மகிழ்ச்சியே.

ஆனால்…..

வழங்கப்பட்ட பட்டத்தில் ஒரு திருத்தம் தேவை என்பது நம் விருப்பம்.

தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனும், செல்வி ஜெயலிலிதாவும் அந்தப் பட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

சொல்லப்போனால், ‘புரட்சி’ என்னும் சொல்லுக்குரிய பொருள் இந்த இருவருக்குமோ, இவர்களுக்குப் பட்டங்கள் வழங்கியவர்களுக்கோ தெரியாது.

மனித சமூகத்தின் முழு வரலாற்றையும் வாசித்தால், உலக அளவில், அரசியலிலும், சமுதாயத்தைச் சீர்திருத்துவதிலும் புரட்சி செய்தவர்கள் யாரெல்லாம் என்பது தெரியும்[பட்டியல் துல்லியமானதாக இருத்தல் வேண்டும் என்பதால் அது பதிவு செய்யப்படவில்லை].

மேற்கண்ட இருவரின் அரசியல் வாரிசு என்று[அதற்குக் கடும் போட்டி நிலவுகிறது] அ.தி.மு.க.வினரால் புகழப்படும் எடப்பாடி பழனிசாமி அவர்களும் புரட்சி ஏதும் நிகழ்த்தியவர் அல்ல. இனி இவர் ஒரு புரட்சியாளாராக ஆவது சாத்தியமே இல்லை.

இந்தப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது, அரசியல் எதிரிகளால் கடும் விமர்சனத்துக்குப் பயன்படுமே தவிர, எடப்பாடியாருக்கும் இது பயன்படாது என்பது உறுதி. 

ஆகவே, எடப்பாடியாருக்குப் ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கியவர்களிடம் நாம் அன்புடன் முன்வைக்கும் கோரிக்கை பின்வருமாறு:

‘பரட்சித் தமிழர்’ பட்டத்தைத் திரும்பப் பெறுங்கள். இதற்கு மாற்றாக, ‘தமிழன்’ என்றொரு பட்டத்தை வழங்குங்கள்.

எடப்பாடியார், தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தன்னைத் தகுதி உடையவராக இன்றுவரை ஆக்கிக்கொள்ளவில்லை.

‘தமிழன்’ என்னும் பட்டத்தைப் பெற்ற பிறகாவது அப்பட்டத்திற்கான முழுத் தகுதியையும் பெற்றவராகத் தன்னை ஆக்கிகொள்வார் என்று நம்பலாம்.

அதற்கான அறிகுறிகள் அவரின் பேச்சுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியத் தொடங்கியுள்ளன என்பது நம் எண்ணம்.

அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று முழு மனதுடன் நம்புகிறோம்.

வாழ்க ‘தமிழன்’ எடப்பாடி பழனிசாமி! நாளும் சிறந்திடுக அவரின் தமிழர்க்கான பணி!

*   *   *   *   *

https://www.hindutamil.in/news/tamilnadu/1101379-edappadi-palanisamy-was-awarded-the-title-of-puratchi-thalaivar-at-madurai-aiadmk-convention-1.html