எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

அண்ணாமலை ராஜினாமாவா? ஊஹூம்... அனுமதிக்கவே கூடாது!!!


"கோவையில், பாஜக சார்பில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். -by Web Editor

அண்ணாமலை விலகினால்.....
*எதார்த்தம், நடைமுறை சாத்தியம், மக்களின் மதிப்பீடு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகத்("இஸ்ரேல்-ஈரான் போரைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும்"-அ.மலை>https://twitter.com/PTTVOnlineNews/status/1780103508185739321)தன்னைத் தலையில் சுமந்து கொண்டாட மோடிக்கு அண்ணாமலை போல் ஒரு தொண்டன் ஒருபோதும் கிடைக்கமாட்டான்.

*‘நீட்’தேர்வுத் திணிப்பை ரத்து செய்யவிடாமல் பாதுகாக்கத் தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு தியாகி[அ.மலை] இந்த இந்திய மண்ணில் இனி அவதரிக்கவே மாட்டார் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

*தமிழன், தன்மானம் என்றெல்லாம் பேசித் திரியும் குறுமதியாளனாக இல்லாமல், ‘ஒரிஜினல்’ இந்தியனாக வாழும் அண்ணாமலைக்கு நிகரான ஓர் 'இந்தி'யன் இந்தப் புண்ணியப் ‘பாரத்’இல் இனியும் பிறக்க வாய்ப்பே இல்லை.

*தனக்குத் தெரிந்தவை தெரியாதவை பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல், எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் ஏடாகூடமாக விமர்சனம் செய்யும் இவரைப் போன்ற ஒரு பெரும் ‘பிறவி மேதை’யை எங்கே தேடினாலும் கண்டறிவது சாத்தியமே இல்லை.

*“மோடி... மோடி.....” என்று உள்ளிழுக்கும் உயிர்க் காற்றும் மோடி; வெளிவிடும் அசுத்தக் காற்றும் மோடியே. மோடி இல்லாமல் நானில்லை; மண் திணிந்த ஞாலமும் இல்லை” என்று தன்னலமின்றி மோடியைப் போற்றும் உத்தமச் சீடனை அவர் இழந்துவிடக்கூடாது.

மேற்கண்ட காரணங்களால், ‘பாஜக’ சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதை நிரூபிக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம்[ஈடுபட்டால், அரசியலிலிருந்தே அ.மலை விலகுவார்] என்று மிக்கப் பணிவுடன் அனைவரின் தாள் தொழுது வேண்டுகிறோம்.

வாழ்க தமிழ்நாட்டின் நிரந்தரப் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை!

‘ராம நவமி’யில் மோடி செய்த மிக மிக மிக நல்ல காரியம்!!!

மிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தச் சிறப்பாகப் பங்காற்றியதற்காக அண்ணாமலைக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணாமலையை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்[dailythanthi.com/].

அதன் தொடக்கம் நம்மைப் பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது.

தொடக்க வரி,

"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி[ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்] திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்பதாகும்.


ராம நவமியில் எதைச் செய்யத் தொடங்கினாலும் அது காலமெல்லாம் நல்ல பயனைத் தரும் என்பது இந்த வரியின் உள்ளர்த்தம் ஆகும். அதாவது, மோடி எழுதிய இந்தக் கடிதத்திற்கு நல்ல பலன் விளையும் என்று நம்புகிறார் அவர்.


கடிதம் எழுதுவதற்குக்கூட நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்று எவரும் மோடியை எள்ளி நகையாடாதீர்.


அது அவர் சுய அனுபவங்களின் மூலம் பெற்ற நம்பிக்கையாகும்.


*கடிதம் வரைவது என்றில்லை, ராம நவமியில், நல்ல நேரம் பார்த்துக்[காலையில்] கழிவறை சென்று காலைக்கடனை நிறைவேற்றினால், நீண்ட காலமாகத் தொல்லை கொடுத்த தீராத ‘மலம் கழித்தல் பிரச்சினை’ தீரும். அப்புறம் நம் ஆயுள் உள்ளவரை மலக் கழிவை வெளியேற்றுவதில் கிஞ்சித்தும் சிரமமே இராது[ஒன்னுக்குப் போவதில் உள்ள தொந்தரவுகளும் அடங்கும்].


*நம் பகையாளியான பக்கத்து வீட்டுக்காரனை, ராம நவமியில், “நீ நாசமாப் போவே” என்று சாபம் கொடுத்தால் அது பலிக்கும்.


*குழந்தைப் பாக்கியம் இல்லாத கணவனும் மனைவியும் அந்த நாளில் உடலுறவு கொண்டால்[பகலோ இரவோ] ஆணோ பெண்ணோ விரும்பிய மகவைப் பெறலாம்.


*ராம நவமி நாளில் திருடப்போகிறவன் திருடு கொடுப்பவர்களிடம் பிடிபடவே மாட்டான்.


*ஆசைக்கு இணங்க மறுத்துப் பல நாட்களாகப் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருக்கும் குமரிப் பெண், 'ராம நவமி'யில் கண் சிமிட்டினால் போதும் ஓடோடிவந்து படுத்துவிடுவாள்.


ஆக,


ராம நவமியில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்துமே நாம் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.


வெல்க மோடி! அண்ணாமலையும் வெல்க!!