ஜோதிடம் பற்றி அறிந்தவர்களில் பெரும்பாலோருக்கு, பிரபல ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலனைத் தெரிந்திருக்கும். 1999இல் வெளியான ‘தினமணி’ தீபாவளி மலரில் ‘வானியலில் வரும் நூற்றாண்டு’ என்னும் தலைப்பில் நீண்ட பெரிய கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.
‘இந்நூற்றாண்டு காணப்போகும் சில முக்கிய நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். விஞ்ஞானப்பூர்வமாகவும், இணையற்ற பண்டைய ஜோதிட நூல்களின் துல்லிய விதிகளின்படியும் பலன்களை நாம் கணித்துள்ளதால் கண்டறியப்பட்ட முடிவுகளில்[நிகழ்வுகள்] தவறு நிகழ வாய்ப்பே இல்லை’ என்று குறிப்பிட்டு, இந்நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளுக்கான பட்டியலைத் தந்துள்ளார்.
அவர் முக்கிய நிகழ்வுகள் என்று குறிப்பிட்டவற்றுள் எனக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளேன்.
1.உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் தில்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழும்.
2.பாகிஸ்தானில் உள்நாட்டுப் பூசல்களும், அமைதிக் குறைவும் அதிக அளவில் ஏற்பட்டுப் பாகிஸ்தான் மூன்று பகுதிகளாகப் பிளவுபடும். ஒரு பகுதி ஈரான், ஆப்கானிஸ்தான்

