புதன், 29 ஏப்ரல், 2026

என் படைப்புகளைப் பிரபலப்படுத்தும் 'Quora' பதிவருக்கு நன்றி!

கந்தன் ஸ்ரீ [பல்சுவை கதம்பம்[https://kantan.quora.com/]

Innovave Goods-இல் Operation Manager20 ஏப்.

*கடவுள்*

ஆசிரியர்: 'பசி'பரமசிவம்

பகிர்வு அ. கந்தன்

🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷

கேடுகெட்ட மானிடரே![&*கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!* & *கடவுளைக் காக்கும் தாய்க்குலம்!* ... போன்றவை] 

*பிறவி ஏன்? இன்ப துன்பங்கள் ஏன்? மரணம் ஏன்?*

மனிதனுக்குச் சிந்திக்கும் திறன் வாய்க்கப் பெற்ற அந்த நாள் முதல் இந்த நாள் வரை இக்கேள்விகளுக்கு விடையில்லை.

பஞ்ச பூதங்கள் ஏன்? பிரபஞ்சம் ஏன்? உலகங்கள் ஏன்? உயிர்கள் ஏன்?...... என்றிப்படி மனித அறிவால் விடை காண முடியாத ஏன்கள் எத்தனையோ உள்ளன.

நடுநிலை பிறழாமல், ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த அறிவியல் அறிஞர்கள் பலரும், சிந்தனையாளர்களும் தருகிற ஒரே பதில்.....

“தெரியவில்லை” என்பதுதான்.

மனித உருவில் பிறந்து வாழும் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான்; விதி விலக்கானவர் எவருமில்லை.

நாம் எல்லோருமே உண்பதும் உறங்குவதுமாய் வாழ்ந்து ஒரு நாள் மண்ணில் கலப்பவர்கள்தான்.

அதன் பிறகு என்ன ஆவோம் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே,

சிறு நீர் பெய்து மலம் கழித்து வாழ்ந்த மனித ஜென்மங்களை மகான்கள் என்றும், கடவுளின் அவதாரங்கள் என்றும் போற்றித் துதி பாடியவர்கள்... பாடுபவர்கள் மனித சமுதாயத்தின் விரோதிகள்.

அவர்கள் திருத்தப்படுதற்கு உரியவர்கள்.

*தொடரும்*

'Quora' பதிவர்:

கந்தன் ஸ்ரீ

கல்லிடைக்குறிச்சி

Innovave Goods-இல் Operation Manager

Govt her sec school-இல் படித்தார்; 1989 ஆண்டு பட்டம் பெற்றார்

வசிக்கும் இடம்: கோயம்புத்தூர் நகரம், தமிழ்நாடு, இந்தியா2024–தற்போது வரை

7.9மி உள்ளடக்கப் பார்வைகள். இந்த மாதம் 83.6ஆ

இவர் 41 களங்களில் செயல்படுகிறார்.