தன் மனைவியின் ஆத்திரமூட்டும் சமூக ஊடகப் பதிவுகளால் பொறுமையிழந்த ஒரு கணவன், வழக்கறிஞரைக் கொண்டு விவாகரத்துக்கு வழி தேடுவது ஒருபுறம் இருக்க, இறந்தவர்களுக்காகப் பொதுவாகச் செய்யப்படும் ஒரு புனிதமான[கருதப்படுவது] இந்து மதச் சடங்கின் மூலம், தங்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு விசித்திரம் அண்மையில் நிகழ்ந்துள்ளது[செய்தி].
உயிரோடு இருக்கும் மனைவியின் படத்துக்கு மாலை அணிவித்துப் பிண்டதானத்திற்கான சடங்கைச் செய்து, அதைக் குளத்து நீரில் வீசி, தன் மனைவி செத்துவிட்டதாக அறிவிக்கிறான் அந்தக் கணவன். வீசுவதற்கு முன்னால் படத்தின் மீது காறித் துப்புகிறான்.
இவனின் இந்தச் செயலுக்குச் சமூக ஊடகங்களில் கண்டனங்களே வெளியாகியுள்ளன.
கணவனும் மனைவியும் மனம் ஒத்து வாழவே முடியாத நிலை உருவானால், கழுத்தை நெறித்தோ, விஷம் வைத்தோ, அடியாட்களை ஏற்பாடு செய்தோ ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டுச் சிறையில் வாழ்நாளைக் கழிக்க நேரலாம்[தூக்குத் தண்டனையும் வழங்கப்படலாம்] இது அவ்வப்போதான அவல நிகழ்வாக உள்ளது.
இதைக் காட்டிலும், ஒரு கணவன்[மனைவியாகவும் இருக்கலாம்] மேற்கண்டவாறு ‘பிண்டதானம்’ செய்துவிட்டு, இருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது[பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை இருவரும் பகிர்தல் முக்கியம்].
* * * * *
'She is dead to me': Husband performs ‘pind daan’ for living wife over Instagram Reels; watch video