எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

பெருமாள் அருளால் முதல்வராகும்[2026] எடப்பாடியாருக்கு நம் வாழ்த்துகள்!

சாமியைத் தரிசனம் பண்ணிப் பரப்புரையைத் தொடங்கினாராம் எடப்பாடியார்.

திருநீறு பூசி, அதில் பொட்டு வைத்து, பரிவட்டம் கட்டி, கிரீடமும் சூடிப் பெருமாள் சாமியைப் பயபக்தியுடன் தரிசனம் பண்ணியதால், அந்தச் சாமி 100% வெற்றி தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்புறம் எதற்கு மக்களிடையே பரப்புரை குரைப்பு உரையெல்லாம்?

சாமியைவிடவும் சக்தி வாய்ந்தது, மக்கள் உட்பட வேறு எதுவும் இல்லை. கும்பிடு போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாம். எல்லாம் பெருமாள் சாமி பார்த்துக்கொள்வார்.

அவர் மக்களின் கனவில் காட்சியளித்தோ, அசரீரியாகவோ "எடப்பாடியாருக்கே உங்கள் ஓட்டு" என்று உத்தரவிடுவார். 

அவரின் உத்தரவுக்கிணங்க மக்கள் வாக்களிப்பார்கள். புரட்சித் தமிழர் தேர்தல் போட்டியில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார்.

அரியணை ஏறிய பிறகு, மறவாமல் பெருமாள் கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாகப் பணம்[கறுப்போ வெள்ளையோ] போட்டு அவருக்கு நன்றி சொல்வது பு. தமிழரின் கடமை.

அப்புறம்?

அப்புறம் என்ன, முதல்வராகிவிட்டால், உண்டியலில் போட்ட பணத்தை வட்டியோடு சேர்த்துச் சென்றாயப் பெருமாள் உரிய முறையில் திருப்பித் தருவார்.

அவர் அதைச் செய்யத் தவறினால், வடபுலத்து முதலாளிகளிடம் கேட்டு வாங்கி ஈடு செய்யலாம்.

சென்றாயப் பெருமாள் போற்றி! வெல்க... வாழ்க எடப்பாடியார்!!

நோயாளியின் மனச்சோர்வால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு!

மீபத்தில் நீரிழிவு நோய் குறித்து உலகம் முழுக்க ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

நீரிழிவு நோயில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில், முக்கியமான காரணிகளைக் கண்டறிவதற்கான சோதனையில் ஏராளமான நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றார்கள்.

அந்த ஆராய்ச்சியில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், அதன் அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள் என்று நோயாளிகளை இரு பிரிவாக்கினார்கள்.

உலகம் முழுதும் உள்ள இரண்டு விதமான நோயாளிகளிலும், அந்த இரண்டு நிலைகளுக்கும் காரணமானவை எவை என ஆய்வு நடத்தப்பட்டது.

நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுதான், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த ஆராய்ச்சியின் முடிவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

நீரிழிவு நோய்க்கான மருந்தைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு[மிகப் பலர்]க்கூட, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்பதே அதற்கான காரணமாக இருந்தது.

தொடர்ந்து ஆராய்ந்தபோது அவர்கள் கண்டறிந்த உண்மை:

தீராத மனச்சோர்வுடன் இருக்கும் நீரிழிவு நோயாளி, முறையாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், சர்க்கரையின் அளவு குறைவதற்கு மாறாக அதிகரிக்கிறது.

எனவே, இப்போதெல்லாம் நீரிழிவு நோய்க்கு மருந்து அளிப்பதோடு, நோயாளியின் மனச் சோர்வைப் போக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

* * * * *

https://healthandbeautymonthly.com/?p=4239