எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 16 ஜூன், 2024

மாமிசம் ருசியோ ருசி? தின்று தொலைப்பீர்! பாவம் கடவுள்கள்!!

மனிதர்கள் விலங்குகளைக் கடவுள்களுக்குப் பலியிட்டு உண்பது குறித்து,  https://www.bbc.comஇல் வெளியானதொரு கட்டுரையை இன்று படித்ததால் உருவான பதிவு இது.

***விலங்குகளைப் பலியிடுவதற்குக் கடவுள்களே அனுமதி வழங்கியிருப்பதாக மதவாதிகள் கட்டிவிட்ட கதைகள் மிகப் பல[இணையத்தில் மிக எளிதாக தேடிக் கண்டறிந்து வாசிக்க முடியும் என்பதால் அவற்றை  இங்கு மீள்பதிவு செய்வது தவிர்க்கப்படுகிறது].

இந்த அறிவியல் யுகத்தில், எத்தனை எத்தனைக் கோணங்களில் சிந்தித்தாலும், இந்தக் கதைகளை நியாயப்படுத்திட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லி, மாமிச உணவுகளை விரும்பி உண்போர்க்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.


அது…..


நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், மாமிசம் உண்ணாமல் வாழ முடியாது என்றால்.....


ஆடோ, மாடோ, பன்றியோ, பாம்போ,  நண்டோ,  நரியோ நீங்கள் விரும்பிய ஓர் உயிரைக் கொன்று, ருசியாய்ச் சமைத்து வயிராறத் தின்று செரியுங்கள். ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும்  கருணை மிகு கடவுள்களைத்[இருக்கிறார்களோ அல்லவோ] துணைக்கு அழைக்காதீர்கள்!!


உயிர் வதை பற்றிய முன்னணி மதங்கள் கட்டும் சப்பைக்கட்டுகள்:


இஸ்லாம்:

இறைத் தூதர் இப்ராஹிம் ஒரு கனவு கண்டதாகவும், அதை அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியாகக் கருதி, கீழ்ப்படிதலுக்காகத் தன் மகன் இஸ்மாயிலைப் பலியிடுமாறு சொன்னதாகவும் நம்பப்படுகிறது. இதனை அவர் தன் மகனிடம் கூறியபோது அதை இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். இப்ராஹிம் தன் மகனைக் கொல்லச் சென்றபோது அல்லாஹ் அவரைத் தடுத்து நிறுத்தி, மகனுக்குப் பதிலாகப் பலியிடுவதற்குச் செம்மறியாட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.


யூத மதம்:

பலியிடுதலின் நோக்கத்தைப் பொருத்து யூதச் சடங்குகளில் விலங்குகளைப் பலியிடுவது பல விதங்களில் நடைபெறுகிறது.


கிறித்தவம்:

"பழைய ஏற்பாட்டில் குறிப்பாக லேவியஸ் 17, இணைச்சட்டம்(Deuteronomy) ஆகியவை, எப்படி விலங்குகள் பலியிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கின்றன.


இந்து மதம்:

"ரிக் வேதத்தில் பண்டைய இந்து மதம் குறித்த பகுதிகளில், பலியிடப்படும் விலங்குகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது". 


https://www.bbc.com/tamil/articles/c0kkxe1yz5lo