‘ஆவி அல்லது ஆன்மாவை அழிக்க முடியாது’ என்று கிறித்தவ வேதம்[bible] கூறுகிறது. உடல் இறந்தாலும், ஆவி தொடர்ந்து வாழும். -https://www.blueletterbible.org/faq/don_stewart/don_stewart_102.cfm
‘ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, அந்த நேரத்தில், அல்லாஹ் பிறக்கவிருக்கும் அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களையும் படைத்தான். ஆன்மா பிறப்பற்றது; அழிவற்றது’ என்கிறது இஸ்லாம் -https://iraiyillaislam.blogspot.com/p/blog-page_99.html
‘ஆன்மா அழியாது; அது அழிவற்றது’ என்று இந்து மதம் கூறுகிறது. உடலின் மரணத்திற்குப் பிறகு ஆன்மா உடலை விட்டு வெளியேறி, கர்மாக்களின் அடிப்படையில் மறுபிறவி எடுக்கிறது என்கிறது அது.
‘ஒவ்வொரு உயிருக்கும் நிரந்தரமான ஆன்மா உண்டு என்றும், கர்ம வினைகளால் அதன் விடுதலைக்கான பாதை அமையும்’ என்றும் நம்புகிறது சமண மதம்.
ஆன்மா அழியாதது என்றும், உடம்பு அழிந்த பிறகும் அது இருந்துகொண்டிருக்கிறது என்றும் பெரும்பாலான மதங்கள் நம்புகின்றன. சில மதங்கள் ஆன்மாவை இறைவனின் பகுதியாகவும், வேறு சில ஆன்மாவை உடலற்ற, நித்தியமான ஒன்றாகக் கருதுகின்றன. -https://www.google.com/search?q=
இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்மா கடவுளுடன் இணைய வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால், அதுவே கடவுள் என்றும் சொல்லப்படுகிறது[சொல்லுகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்களே]. -https://www.dadabhagwan.org/path-to-happiness/spiritual-science/what-is-a-soul/nature-of-soul/

