எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஆறறிவைச் சிதைக்க ஓர் ஆண்டவன் போதும்; ஆன்மா எதற்கு?

‘ஆவி அல்லது ஆன்மாவை அழிக்க முடியாது’ என்று கிறித்தவ வேதம்[bible] கூறுகிறது. உடல் இறந்தாலும், ஆவி தொடர்ந்து வாழும். -https://www.blueletterbible.org/faq/don_stewart/don_stewart_102.cfm

‘ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ​​அந்த நேரத்தில், அல்லாஹ் பிறக்கவிருக்கும் அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களையும் படைத்தான். ஆன்மா பிறப்பற்றது; அழிவற்றது’ என்கிறது இஸ்லாம் -https://iraiyillaislam.blogspot.com/p/blog-page_99.html

‘ஆன்மா அழியாது; அது அழிவற்றது’ என்று இந்து மதம் கூறுகிறது. உடலின் மரணத்திற்குப் பிறகு ஆன்மா உடலை விட்டு வெளியேறி, கர்மாக்களின் அடிப்படையில் மறுபிறவி எடுக்கிறது என்கிறது அது.

‘ஒவ்வொரு உயிருக்கும் நிரந்தரமான ஆன்மா உண்டு என்றும், கர்ம வினைகளால் அதன் விடுதலைக்கான பாதை அமையும்’ என்றும் நம்புகிறது சமண மதம்.

ஆன்மா அழியாதது என்றும், உடம்பு அழிந்த பிறகும் அது இருந்துகொண்டிருக்கிறது என்றும் பெரும்பாலான மதங்கள் நம்புகின்றன. சில மதங்கள் ஆன்மாவை இறைவனின் பகுதியாகவும், வேறு சில ஆன்மாவை உடலற்ற, நித்தியமான ஒன்றாகக் கருதுகின்றன. -https://www.google.com/search?q=

இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்மா கடவுளுடன் இணைய வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால், அதுவே கடவுள் என்றும் சொல்லப்படுகிறது[சொல்லுகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்களே]. -https://www.dadabhagwan.org/path-to-happiness/spiritual-science/what-is-a-soul/nature-of-soul/

இவ்வாறாக, ‘ஆன்மா’ என்று ஒன்று உணடு என்று மதங்கள் பலவற்றாலும் வலியுறுத்தப்படும் நிலையில், நம்மில் மிகப் பெரும்பாலோர் ‘ஆன்மா’வை நம்புவதில் வியப்பேதுமில்லை.
நம்பாத நாம் முன்வைக்கும் அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.

‘அனைத்தையும் படைத்த கடவுளே சர்வ வல்லமை படைத்தவர்[படைப்பது & காப்பது & அழிப்பது] என்கிறார்கள் பெரும்பாலான மதவாதிகள். அவரால் அழிக்க முடியாததாக ஆன்மா என்று ஒன்று இருப்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை’ என்பதே அது.

மேலும், மதவாதிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது.....

மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைக்க உங்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுளே போதும். ஆன்மா, கர்மா, மறுபிறப்பு எல்லாம் வேண்டாமே.