எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 29 டிசம்பர், 2021

விரல்களை வீங்க வைத்த 'வயாகரா'!!![சிரிப்புக் கதை]

'ஜேம்ஸ்', சிகாகோ மருத்துவமனையில் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தார்.

தனக்கான முறை வந்ததும் பார்த்தார்.

தேவையான பரிசோதனைகள் முடிந்ததும் "உங்க உடம்பில் பிரச்சினை ஏதுமில்லை. நீங்க போகலாம்" என்றார் மருத்துவர்.

ஜேம்ஸ் தயங்கியபடி நிற்க, மருத்துவர் மீண்டும், "நீங்க போகலாம்” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார். 

ஜேம்ஸ் மருத்துவருக்கு மிக அருகில் சென்று, "எனக்கு வயாகரா வேண்டும்” என்றார். 

மருத்துவர் 1 வயாகரா 100mg எழுதினார். 

"இது போதாது டாக்டர்.” -ஜேம்ஸ்.

"ஒன்றுக்கு மேல் எழுத முடியாது." -டாக்டர்.

ஜேம்ஸ் விடுவதாக இல்லை. “மூன்று கேர்ள் ஃபிரண்ட்ஸைச் சந்திக்க போகிறேன். எனக்கு மூன்று மாத்திரைக்கு எழுதிக் கொடுங்கள்" என்றார்[ஒரு சந்தேகம்: மருத்துவர் சீட்டு எழுதித் தந்தால் மட்டும்தான் வயாகரா வாங்க முடியுமா? உலக நடப்பு என்னவோ?].

டாக்டர் மூன்று மாத்திரைகளை எழுதினார். 

சில நாட்கள் கழிந்தன.

முதல் ஆளாக மருத்துவமனை சென்று அதே மருத்துவரைப் பார்த்தார் ஜார்ஜ்.

"என்ன பிரச்சினை?" என்றார் மருத்துவர்.

"என்னோட மூனு கேர்ள் ஃபிரண்ட்ஸ் என்னைச் சந்திக்கிறதா இருந்த அந்த நாள் வந்தது. காலையில் ஒரு மாத்திரை போட்டுகிட்டு ஒருத்திக்குப் போன் பண்ணினேன். ஒரு மணி நேரத்துக்கு மேலா காத்திருந்தும் அவள் வரல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இன்னொரு மாத்திரை விழுங்கிட்டு மற்றொருத்திக்குத் தகவல் சொன்னேன். அவளும் வரல. காத்திருந்து சலிச்சிப் போய், மூனாவதா ஒரு மாத்திரை எடுத்துட்டு இன்னொருத்தியிடமும், உடனே புறப்பட்டு வா"ன்னு சொன்னேன். அவள் "அடுத்த வாரம் வர்றேன்"னு சொல்லிப் போனை வைச்சுட்டா" என்று குரலில் சோகம் கொப்பளிக்கச் சொன்னான் ஜார்ஜ்.

அவனை உற்றுப் பார்த்த மருத்துவர், "அவங்க ஏமாத்தினதுக்கும் உன் கை விரல் வீக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.

சற்றே தயங்கிய ஜார்ஜ், "அது வந்து... வந்து... வந்து..." -சொல்ல நினைத்ததைச் சொல்ல இயலாமல் முகத்தில் அசடு வழிய நின்றுகொண்டிருந்தான்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவன் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர், லேசான புன்னகையுடன், "கட்டிய பெண்டாட்டியை நம்பலாம். இனியும் கேர்ள் ஃபிரண்ட்ஸை நம்பி உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம்" என்று புத்திமதி சொன்னதோடு, விரல் வீக்கத்துக்கான மாத்திரையும் எழுதிக் கொடுத்தனுப்பினார்.

குறிப்பு: கதையின் முடிவு புரிந்ததா? புரியலேன்னா இழப்பு ஏதும் இல்லை. முக்கிய வேலை எதுவும் இருந்தா பாருங்க! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================ஆதாரம்: 

https://nakkheeran.in/360-news/life/20-years-viagra-gives-pleasure-and-gets-life-2


கல்லூரிக் காதல்![படிப்பினைக் கதை]

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ”உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

’தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.” -ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, ’அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.