எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 18 மார்ச், 2025

ஔரங்சீப் கல்லறையை உடைத்து நொறுக்கத் தயார்! ஒரே ஒரு நிபந்தனை!!

#உத்தரப்பிரதேச வலது சாரிகள், அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாகராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை உடைப்பவருக்கு 21 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸின் தலைவரான தினேஷ் ஃபல்ஹாரி இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்#

சற்று முன்னர்தான் மேற்கண்ட செய்தியை வாசித்தறிய நேர்ந்தது.

கீழ்வரும் நிபந்தனையை வலதுசாரிகள் நிறைவேற்றினால், சத்ரபதி சம்பாஜி நகர் சென்று அவுரங்சீப்பின் கல்லறையை ஓரிரு நாட்களில் உடைத்துத் தூளாக்குவேன் என்பதைத் தெரிவிக்கிறேன்.

நிபந்தனை.....

ஔரங்சீப்பின் ஆவி 24 மணி நேரமும் கல்லறையைச் சுற்றிக்கொண்டு அதைக் காவல் காப்பதாகச் சொல்லப்படுகிறது.

மந்திரங்கள் சொல்லியோ தந்திரங்கள் மூலமாகவோ அந்த ஆவியை அங்கிருந்து விரட்டியடித்து, ஆவி அடித்துப்பிடித்து ஓடுவதைக் காணொலியாக்கி ‘யூடியூப்’இல் வெளியிடுதல் வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

ஆவி உண்டு என்பதை 100% நம்புகிறவன் நான்[நாத்திகம் பேசுவதெல்லாம் வெறும் நடிப்பு]. இந்தத் தகவலை எவரேனும் தினேஷ் ஃபல்ஹாரிக்கு அனுப்பிவைத்தால் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டவனாக இருப்பேன். அவர்களுக்கு ரூ21 லட்சத்தில் சரிபாதிப் பங்கு உண்டு!

* * * * *

https://tamil.samayam.com/latest-news/india-news/uttar-pradesh-right-wing-announced-a-reward-of-rs-21-lakh-for-demolishing-mughal-emperor-aurangzebs-grave/articleshow/119154133.cms


மரச் செக்கு[எண்ணை அரைக்கும் இயந்திரம்] மாடு மோடி!!!

புது தில்லி, மார்ச் 17: பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டும் திங்கள்கிழமை தேசியத் தலைநகரில் சந்தித்து, மகிழ்ச்சியான விஷயங்களை மட்டுமல்லாமல், கங்கா ஜலம்(புனித கங்கை நீர்) மற்றும் கைவினைப் பொருள் மாலை போன்ற பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்[செய்தி#].

இரு பிரபலங்கள் சந்திக்கும்போது ‘நினைவுப் பரிசு’களைப் பகிர்வது வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம்

அம்மையாருக்கு கைவினைப் பொருள் என்று சொல்லப்படும் மாலையைப் பரிசளித்தார் என்பது ஏற்கத்தக்கது. கங்கா ஜலம்[மலஜலம் நினைவுக்கு வருகிறது. ஹி... ஹி... ஹி!!!] நிறைத்த ஒரு குடுவையை[தங்கம்?]யும் பரிசாக அளித்தார் என்பதுதான் உறுத்துகிறது.

மனித மலம், சிறுநீர், உடல் அழுக்கு போன்ற கழிவுகள் இரண்டறக் கலந்த கங்கை நீர் இவருக்கும் இவருடைய அடிப்பொடிகளுக்கும் புனிதமானதாக இருக்கலாம். அமெரிக்காவின்[பெரும்பாலும் கிறித்தவ மதத்தவர் வாழும் நாடு]அந்தப் பெண்மணி இதைப் புனிதமானது என்று நம்புவாரா?

இதனால் அவர் பெறும் பயன் என்ன?

அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் பருகுவாரா? குளிக்கும் நீரில் சிறிதே கலந்துகொள்வாரா? என்ன செய்வார்?

மோடி இது பற்றிச் சிந்திக்காதது ஏன்?

ராட்சத அண்டாக்களில் கங்கை[அபுனிதம்] நீரை நிறைத்து வைத்துக்கொண்டு தினமும் அதில்தான் நீராடுகிறாரோ என்னும் சந்தேகமும் எழுகிறது.

அண்மைக் காலங்களில், மோடி எங்கே போனாலும், எதைச் செய்தாலும் எதைப் பற்றிப் பேசினாலும்[RSS ஐத் தொடர்புபடுத்திப் பேசும்போது, அதைப் புனிதமானது என்றார்]; சுற்றிவளைத்துத் தன்னைப் புனிதராகக் காட்டிக்கொள்ளத் தவறுவதே இல்லை

இவர் 100% புனிதர் என்பதில் சொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!

* * * * *

https://theshillongtimes.com/2025/03/17/pm-modi-meets-tulsi-gabbard-gifts-her-vase-containing-holy-ganga-water-from-maha-kumbh/