சென்னையில்[வசிப்பிடம் வேண்டாம்] ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்தத் தொழிலதிபர் தன் மனைவியுடன் வசிக்கிறார்.
அங்குக் குடியேறிய ஓர் இளைஞன்[+தாய் & சகோதரன்], தொழிலதிபர் மனைவியுடன் நெருங்கிப் பழகினான். நெருக்கம் கள்ளக் காதலாக[காம உறவு] மாறியது.
அவன் அந்த அம்மணிக்குத் திகட்டத் திகட்ட உடலுறவுச் சுகத்தை வாரி வழங்கியதால், அவன் கேட்கும்போதெல்லாம் தங்க நகைகளை அவனுக்குக் கொடுத்து நன்றி செலுத்தினாள் அவள்.
அப்படிக் கொடுத்தவற்றை ஒரு கட்டத்தில் கணக்கிட்டபோது அவற்றின் அளவு ஒரு கிலோ என்பது தெரிந்தது. தங்கம் என்றில்லாமல் அவனுக்கு வைர நகைகளும், வெள்ளிப் பொருட்களும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள்.அளவு மீறி உடலுறவுச் சுகம் துய்த்து, ஒரு நிலையில் சலிப்புணர்ச்சிக்கு உள்ளானதாலோ என்னவோ, அவள் அவனின் தொடர்பைத் துண்டித்ததும், கையிருப்பில் அவளின் ஆபாசப் படங்கள் தன்னிடம் இருப்பதாக அவன் மிரட்டியதும், அம்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவர்கள் விசாரணை மேற்கொண்டிருப்பதும் கூடுதல் செய்திகள்.
தங்க வைர நகைகள் கொடுத்துத் தாபம் தணித்துக்கொள்ளும் கட்டுக்கடங்காத காம இச்சைப் பெண்களும்[சிலர்?] நம்மிடையே இருக்கிறார்கள் என்பது, நவீன நாகரிக உலகில் வியக்கத்தக்க ஒன்றல்ல எனினும், அவனுடனான உறவில் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை.
அவனைவிடவும் காமக் கலையில் அதி நிபுணத்துவம் பெற்றவனுடன் உறவாடும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டியிருக்கலாம்.
எது எப்படியோ, அள்ளி அள்ளிக் கொடுத்து அது விசயத்தில் அள்ள அள்ளக் குறையாத அந்தரங்கச் சுகம் பெறும் பெண்களுக்கிடையே, போதிய அழகில்லாததாலோ, வரதட்சணை கொடுக்க வசதி இல்லாததாலோ, கழுத்தில் தாலி ஏறாமல், தாம்பத்தியம் என்றால் என்னவென்றே அறியாத முதிர் கன்னிகளும் இங்கே இருக்கிறார்கள் என்பது மனதை நெருடும்/வருத்தும் கசப்பான உண்மை.
‘ஆண்களுடன் புணர்ச்சி இன்பம் துய்த்த பின், கூந்தலில் பூச் சூடி மகிழ்ந்திருக்கும் பெண்களுக்கிடையே, அதற்கான வாய்ப்பில்லாமல் வாடி வருந்தும் பெண்களையும் படைத்த கடவுள் பண்பில்லாதவன்’ என்னும் பொருளமைந்த சங்கப் பாடலடிகள் நினைவுக்கு வருகின்றன.
‘..... புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்.....’