எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

குலைகுலையாய் முந்திரிக்காய்! வகைவகையாய்த் திருமணம்!!

14.03.1950 ‘விடுதலை’ இதழில், ‘சித்திரபுத்திரன்’ என்னும் புனைபெயரில், ‘திருமண விழா; வினா - விடை’ என்னும் தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்துப் பெரியார் எழுதியிருக்கிறார். அவ் வினா - விடை யைப் படித்து மகிழுங்கள்!
சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாமலும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறியாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச்[சடங்குகள்] செய்யாமல் நடத்தும் திருமணம்.

தமிழர் திருமணம் என்பது என்ன?
கணவனுக்கு மனைவி அடிமை[தாழ்ந்தவள்] அல்ல;  அவனுக்கு உள்ள உரிமைகள் இவளுக்கும் உண்டு என்னும் கருத்தை ஏற்று, நடைமுறைப்படுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு மணம் புரிதல்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜாதகம் பார்த்தல், சகுனம் பார்த்தல், சாமி கேட்டல் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமலும், மணமக்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டும், பேசிப் புரிந்துகொண்டும் செய்துகொள்ளும் திருமணம்.

புரட்சித் திருமணம் என்பது என்ன?
தாலி கட்டாமல் நடத்தும் திருமணம்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
மண்டபம், விருந்து, இன்னிசை, பாட்டுக் கச்சேரி முதலானவற்றைத் தவிர்த்து, ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் குறைந்த செலவில் ஒரே நாளில் நடத்தி முடிக்கும் திருமணம்.
===============================================================================

நன்றி: யுவகிருஷ்ணா, தினகரன் நாளிதழ் வசந்தம்[இணைப்பு],22.01.2017.