எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 13 ஜனவரி, 2024

ஊஹூம்..... நம் பிரதமர் மோடி நல்லவரல்ல!!![பகிர்வு]

 

உண்மையில்லை.

மோடியின் 4 வருட ஆட்சியில்.....

கீழே உள்ள தகவல்கள் மோடி நல்லவரல்ல; திறமையானவரும் அல்ல என்பதற்கான ஆதாரங்கள். எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்.

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு

2-மருந்துப் பொருள் விலை உயர்வு

3-ரயில் கட்டண விலை உயர்வு

4-கேஸ் விலை உயர்வு

5-புதிய வரிகள்

6-பெரு முதலாளிகளின் வாராக் கடன்கள்

7-வெளிநாட்டுக் கருப்புப் பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்

8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்

9-ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

10- மோடி வெளிநாட்டுப் பயணச் செலவுகள்

11- வெளியுறவுக் கொள்கையில் தோல்வி

12- ராணுவ வீரர் ஓய்வூதியத் திட்ட தாமதம்

13- உதய் மின் திட்டம் தோல்வி

14- தமிழ்நாடு வறட்சி/மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணம் வழங்காதது

15- தபால் துறை வழியாகக் கங்கை நீர் விநியோகம் தோல்வி

16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப் பதிவு

17- அருணாசலப் பிரதேச ஆட்சிக் கலைப்பு

18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு

19- சீனப் பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேரப் பேச்சு

20- பலுசிஸ்தான் தலையீடு 

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பயனற்ற பேச்சுகள்

22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு & விதிமுறை மாற்றங்கள்

23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்

24-ஜி.டி.பி. குளறுபடி

25-புதிய வங்கிக் கட்டணங்கள் அதிகரிப்பு-ஆதார் திணிப்பு

26-அந்நிய நேரடி முதலீடு

27-தூய்மை இந்தியா திட்டம் தோல்வி

28-மேக் இன் இந்தியா?

29-டிஜிட்டல் இந்தியத் திட்டம் குளறுபடிகள்

30-அணு உலை

31-புல்லட் ரயில்?

31-நில கையகப்படுத்தும் மசோதா?

33-ஸ்மார்ட் சிட்டி?

34-ஹிந்தித் திணிப்பு

35-செயல்படாத காவேரி நீர்மேலாண்மை ஆணையம்

36-நீதிபதிகள் நியமனம் தாமதம்

37-ஜி.எஸ்.டி

38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

39-IT ஊழியர்கள் பணி நீக்கம்

40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை

42-ரோஹித் வெமுலா

43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்

44-வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள்

45-ரகுராம் ராஜன் மாற்றம்

46-ஜல்லிக்கட்டு 

47-உத்திரகாண்ட் - சீனா ஊடுருவல் 15 கிமீ

48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா? தொடர் ராணுவ வீரர்கள் பலி

49-ஜியோ சிம் விளம்பரம்

50-லலித் மோடி விவகாரம்

51-வியாபம்?

52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்

53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா

54-தனி விமானம் 2000 கோடி?!

55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் - அதிக விலை

56-15 லட்சம் ஆடைகள்

57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானிக்குத் தொழில் வாய்ப்புகள்

58-பள்ளிப் பாடப் புத்தகங்கள் - வரலாறு திரிப்பு

59-முக்கியப் பிரச்சனைகளில் மௌனம்

60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு-செயல்பாடுகள்

61-ஓரினச் சேர்க்கை, பலாத்காரம், பெண் கலாச்சாரம் - முரணான கருத்துக்கள்.

62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது

62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM

64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்

65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வித் தகுதி

66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வித் தகுதிச் சர்ச்சை

67-தேச பக்தி நாடகமாடுதல்

68-மேகாலயா கவர்னர் காம லீலை

69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டது

70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதம் திணிப்பு

72-புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு

73-பொது சிவில் சட்டம் திணிப்பு

74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்

75-மாட்டுக் கறிக்குத் தடை

76-மாட்டுக் கறி விற்பனை - கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)

77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமைத் தீர்ப்பாயம் அபராதம்

78-அயோத்தி ராமர் கோவில் அபிரிதப் பணச் செலவு - மிகை விளம்பரம்

79-அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சு

80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா திணிப்பு

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் - தீர்ப்பு & வன்முறை

82-டெல்லி விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்

84-SBI மினிமம் பேலன்ஸ் 5000

85- சிறுபான்மையினர் விரோதப் போக்கு

86-மாட்டு அரசியல்

87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள்

88-நீட் தேர்வுத் திணிப்பு

89-ரேஷன் மானியம் நிறுத்தம் .

90 ஆதார் அட்டைக் குளறுபடிகள்.

______________________________________

***நல்ல பிரதமர் எங்ஙனம்?

'புரட்சி நாயகன்’ நரேந்திர மோடிக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!

மிக முக்கியக் குறிப்பு: மோடி அவர்களுக்குப் ‘புரட்சி நாயகன்’[‘புரட்சித் தலைவர்’ பட்டம் ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது அறியத்தக்கது] என்று அடைமொழி சேர்த்ததில் கொஞ்சமும்[0%] ‘வஞ்சப் புகழ்ச்சி’ இல்லை; இது 100% உண்மைப் புகழ்ச்சி!

* * * * *

//ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. அந்தச் சிலையை எடுத்துக்கொடுக்கவிருப்பவர் பிரதமர் மோடி. இதைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார் ஒடிசாவில் உள்ள ‘பூரி’ சங்கராச்சாரியார்// என்பது அண்மைச் செய்தி.*

எதிர்ப்புக்கான காரணம்.....

அனைத்து இந்துமதக் கடவுள்களாலும் தங்களுக்கான பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ‘பிராமணர்’ அல்லர் மோடி என்பது.

இந்நிலையில், குடமுழுக்குச் செய்யப்படும் புதிய கோயில்களின் கருவறைக்குள் நுழைந்து, பிரதிஷ்டை[சாமி சிலைகளுக்கு உயிரூட்டுவது] செய்யப்படவுள்ள சிலையை உரிய இடத்தில் இருத்தி, மந்திரம் ஓதுவது, தீபாராதனை காட்டிப் பூஜை செய்வது முதலான புனிதச் சடங்குகளைச் செய்யும் உரிமையைப் பெற்றவர்கள் பிராமணர்களே என்பது நினைவுகூரத்தக்கது.

மோடி பிராமணன் அல்லர் என்பது நம் நம்பிக்கை.

பிராமணன் அல்லாத மோடி, கருவறைக்குள் நுழைவதோடு[தமிழ்நாட்டில் பிரபலங்கள் சிலர் கருவறைக்குள் நுழைவதற்கு[மட்டும்] அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கடந்த கால நிகழ்வு] ராமர் சிலையைத் தொட்டு எடுத்துக் கொடுப்பது அனைத்து இந்துக் கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட சங்கராச்சாரி என்னும் பிராமணனை[சாதி குறிப்பிடுவது தவிர்க்க இயலாததாக உள்ளது]க் கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கிருக்கிறது.

சிலையைத் தொட்டெடுத்துக் கொடுப்பவர் பிரதமர் என்பதால், அதை வெளிப்படுத்த இயலாமல், ‘அயோத்தியில் எல்லாவற்றையும் மோடி செய்துவிட்டால், பிறகு மத குருமார்களுக்கு என்ன வேலை?’ என்று கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.

இவரைப் போலவே வேறு சில சாமியார்களும் “கலந்துகொள்வதில்லை” என்று சொல்லி மோடி மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்களும்கூட, புதிய ராமர் கோயில் குடமுழுக்கு விசயத்தில் மோடி அரசியல் செய்வதாகச் சொல்லித் தங்களின் எதிர்ப்பை உலகறியச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர, தீவிரப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் பலரும், “ராமனை இவர் கொண்டாடுவதன் நோக்கமே, பக்தியின் பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்” என்று சொல்லக்கூடும்.

எது எப்படியோ,

பிராமணன் அல்லாத மோடி, அயோத்தி ராமர் கோயிலின் கருவறை[சந்நிதிக்குள்]க்குள் நுழைந்து ராமன் சிலையைத் தொட்டெடுத்துக் குடமுழுக்கு விழாவைத் தொடங்கி வைப்பதென்பது, ஆன்மிகப் புரட்சி மட்டுமல்ல, இந்நாள்வரை வரலாற்றில் இடம்பெறாத சமுதாயப் புரட்சியும்கூட!

மோடி ஆகச் சிறந்த ஒரு புரட்சியாளன்!!

இந்தப் புரட்சி நாயகனை “வாழ்க பல்லாண்டு” என்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!!!

* * * * *

*https://www.vikatan.com/government-and-politics/why-do-sankaracharya-too-boycott-ram-temple-consecration-in-ayodhya?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIw8tfoAg&utm_content=rundown&gaa_at=g&gaa_n=AZsHK_mYgcDJlrnJOCDY7lJRPXHwm80_srM5yFfspq1Td9mSE0rwYEOD9uIVnkEp63ybH6nLs4D70g%3D%3D&gaa_ts=65a26a85&gaa_sig=A4KTHSZ4xFnoa7a8dyxMZcd62Sz5l0zi0G7gS1bC4XxjtrtoWTZ6P8cfQklJ9l5tkk_PZiQUmSsX6N7RDMiytg%3D%3D