'கல்கண்டு' இதழிலிருந்தும், நூலகத்தில் சீந்துவாரற்றுக் கிடந்த ஒரு சிற்றிதழிலிருந்தும், சுட்டெடுத்த சீரிய தகவுரைகளை இணைத்துப் பதிவாக்கியிருக்கிறேன். 'என்னுரை' ஏதும் இங்கு இடம்பெறவில்லை.
தடித்த உதடுகள், தட்டையான மூக்கு, வட்டமான கண்கள், குட்டையான உடம்பு என்று தோற்றமளித்தவர் அறிஞர் 'சாக்ரடீஸ்'.
ஒரு சமயம், சாமுத்திரிகா லட்சணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவர், சாக்ரடீஸின் சீடர்கள் முன்னிலையில், ''சாக்ரடீஸின் அவலட்சணங்கள், அவர் துர்க்குணங்கள் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன'' என்று சொன்னாராம்.
இதைக் கேட்ட சாக்ரடீஸின் சீடர்கள் அந்த மனிதரை அடிப்பதற்குப் பாய்ந்தார்கள்.
அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ''அவர் சொல்வது உண்மைதான். என்னிடம் துர்க்குணங்கள் இருந்தன. என்னுடைய மன உறுதியாலும் இடைவிடாத முயற்சியாலும் அவற்றை அடக்கி ஆண்டேன்'' என்றார்# -'கல்கண்டு', 06.06.2018.
* * *


