எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 5 ஜூலை, 2018

சாக்ரடீஸின் சாமுத்திரிகா லட்சணமும் மனிதகுலத்தின் அவலட்சணமும்!!

'கல்கண்டு' இதழிலிருந்தும், நூலகத்தில் சீந்துவாரற்றுக் கிடந்த ஒரு சிற்றிதழிலிருந்தும், சுட்டெடுத்த சீரிய தகவுரைகளை இணைத்துப் பதிவாக்கியிருக்கிறேன். 'என்னுரை' ஏதும் இங்கு இடம்பெறவில்லை.

தடித்த உதடுகள், தட்டையான மூக்கு, வட்டமான கண்கள், குட்டையான உடம்பு என்று தோற்றமளித்தவர் அறிஞர் 'சாக்ரடீஸ்'.
ஒரு சமயம், சாமுத்திரிகா லட்சணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவர், சாக்ரடீஸின் சீடர்கள் முன்னிலையில், ''சாக்ரடீஸின் அவலட்சணங்கள், அவர் துர்க்குணங்கள் கொண்டவர் என்பதைக் காட்டுகின்றன'' என்று சொன்னாராம்.

இதைக் கேட்ட சாக்ரடீஸின் சீடர்கள் அந்த மனிதரை அடிப்பதற்குப் பாய்ந்தார்கள்.

அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ''அவர் சொல்வது உண்மைதான். என்னிடம் துர்க்குணங்கள் இருந்தன. என்னுடைய மன உறுதியாலும் இடைவிடாத முயற்சியாலும் அவற்றை அடக்கி ஆண்டேன்'' என்றார்# -'கல்கண்டு', 06.06.2018.
                                      *                                *                                 *

'உயர்ஞான தீபம்' என்னும் பக்திச் சிற்றிதழிலிருந்து.....
இரு இதழ்களுக்கும் என் நன்றி.











6 கருத்துகள்:

  1. அதிகபட்சம் ஒரு 5000 வருசம், மனுசன் அழிஞ்சுடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளைக் கொண்டாடுபவன் மனிதன் மட்டுமே. இந்த இனம் அழிந்துபோகக் கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்!

      நன்றி புதுமுகன்.

      நீக்கு
  2. அரிய தகவல்தான் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்றிதழ்களில் சில நேரங்களில் இம்மாதிரி அரிய தகவல்கள் கிடைப்பதுண்டு.

      நன்றி நண்பரே.

      நீக்கு