எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

அந்தக் கால விலைமகளிர் கையாண்ட அசத்தல் விளம்பர உத்தி!!!

பாலுணர்வைப் பொருத்தவரை, வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியமான பழக்கங்களும் சடங்குகளும்   இருந்திருக்கின்றன.

விபச்சாரிகள் எனப்பட்ட விலைமகளிர் ‘பாலுறவுத் தொழிலாளர்கள்’ என்று இப்போது கௌரவமாக அழைக்கப்பட்டாலும், இவர்களுக்குத் தங்கள் தொழில் குறித்து விளம்பரம் செய்துகொள்ளும் உரிமையை எந்த நாடும் இதுவரை கொடுக்கவில்லை.

இப்படிப்பட்டவர்களைத் தேடி, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் தாய்லாந்து போன்ற நாடுகளில்கூட விளம்பரங்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால், பழங்கால ரோமாபுரியில் செக்ஸ் தொழில் செய்யும் பெண்கள் நூதனமான விளம்பர யுக்தியைக் கையாண்டனர். பல நாடுகளிலிருந்து வாணிபம் செய்ய வரும் வணிகர்கள், தொலைதூரப் பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும் போர்வீரர்கள் என்று பலரும் பெண்களைத் தேடி அலைவார்கள். சந்தடி மிகுந்த சந்தைகளில் யாரெல்லாம் இந்த வகைப் பெண்கள் என்று அடையாளம் காண்பது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது.

அவர்களின் சிரமத்தைப் போக்குவதற்குக் கீழ்க்காணும் விளம்பர உத்தி விலைமாதரால் பயன்படுத்தப்பட்டது.

இம்மாதர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான செருப்பு அணிவதன் மூலம் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தினார்கள். செருப்பின் அடிப்பாகத்தில், ஒற்றை வரியில், குறிப்பிட்ட சில வார்த்தைகளைச் செதுக்கி வைத்தார்கள்.

அவர்கள் சாலைகளில் நடக்கும்போது, ‘என்னைப் பின்தொடர்ந்து வா’ என்னும் அந்த வார்த்தைகள் மண்ணில் பதியும்.

சபல ஆசாமிகளின் கண்களில் இந்த வாசகம் படுமேயானால், பரவசமாகி, விலைமாதர் பதித்துச் சென்ற தடயங்களைப் பின்தொடர்வார்கள். விரும்பும் பெண்ணைத் தேர்வு செய்து தாபம் தணிப்பார்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலுறவுத் தொழில்காரிகள் அதிபுத்திசாலித்தனமாக  இம்மாதிரி விளம்பர உத்தியைக் கையாண்டது பேராச்சரியம்தான்.’ 
===========================================================
நன்றி: டாக்டர் நாராயண ரெட்டி. அவர் எழுதிய, ‘உயிர்’ என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது மேற்கண்ட வரலாற்றுச் செய்தி.