எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 10 ஜூலை, 2025

இவர்கள் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்கள்!!!

மிழில் வெளியாகும் பத்திரிகைகளில்[நாளிதழ்கள்] தினத்தந்தி, தினமணி, தினகரன், இந்து தமிழ் திசை, தினமலர், காலைக்கதிர் ஆகியன முன்னணிச் செய்தி ஊடகங்கள் ஆகும்.

செய்திகளை வெளியிடுவதால் இவை செய்திப் பத்திரிகைகள்.

இவை செய்திகளை வெளியிடுவதோடு விற்பனையை அதிகரிப்பதற்காக, கல்வி, அறிவியல், மருத்துவம் ஆகியவற்றுடன் மகளிர்&சிறுவர் தொடர்பான  கட்டுரைகளையும் ‘இணைப்பு’ இதழ்கள் மூலம் வெளியிடுகின்றன.

பாராட்டுக்குரிய செயல்தான் இது.

ஆயினும், சிந்திக்கும் திறனைச் சிதைக்கும் ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றிற்கும்கூட இணைப்புகள் வெளியிடுவதுதான் நம்மை கடும் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது; கண்டிக்கவும் தூண்டுகிறது.

பழையப் புராணக் குப்பைகளைக் கிளறி, நம்பவே இயலாத கதைகளையெல்லாம்[ஆபாசக் கதைகள் உட்பட] இணைப்புகளில் வெளியிடுகிறார்கள்.

இவை குறித்து நிறையவே எழுதலாம். உதாரணத்திற்கு ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பில்[10.07.2025] வெளியானதொரு கட்டுரையின் நகல் பதிவு:

கற்பனைக் கதைகளைப் பகிர்வதில் வரன்முறை ஏதும் இல்லையா?

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, எறும்பு, முயல், தவளை என்று இவையெல்லாம் ஈசனைப் பூஜித்துப் பேறு பெற்றன என்று பகுத்தறிவுக்குப் புறம்பான புராணக் கதைகளை மக்களிடையே பரப்புகிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?

பேய், பிசாசு, ஆவி, பூதம் எல்லாமும்கூட வழிபாட்டின் மூலம் வீடு பேறு பெற்றதாகவும் கதைகள் வெளியிடுவார்களோ?

இவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதோடு, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்களும் ஆவார்கள்!

மோடிக்கு விருதுகள்... ‘விருது சூழ் வித்தகன்’! ‘சுற்றுலா நாயகன்’!!

பிற நாட்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு நம் பிரதமர் மோடிக்கு விருதுகள்[பெற்றுள்ள விருதுகள் 27] வழங்கி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்; பெருமிதம் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் ஒரு விருது மட்டுமே{‘தர்மச் சக்ரவர்த்தி’[?!] வழங்கப்பட்டுள்ளது> https://www.dinamalar.com/news/india-tamil-news/prime-minister-modi-honored-with-the-title-of-dharma-chakravarthy/3967761< இது போதாது. ஒரு நூறு விருதுகளேனும் வழங்குதல் அவசியம்}.

இப்போதைக்கு, அனைத்திந்தியர்களிடமும் கீழ்க்காணும் விருதுகளை[ஒன்றுக்கு இரண்டாக] அவருக்கு வழங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

விருதுகள்:

1.‘விருது சூழ் வித்தகன்’

2.‘சுற்றுலா நாயகன்’

நம்மவர் இப்போது நமிபியாவில் இருக்கிறார்.

[குஜராத்தில் பிரமாண்டமான பாலம் ஒன்று உடைந்து விழுந்து உயிர்ச் சேதங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் மோடி நாடு திரும்பியிருக்க வேண்டாமா என்று எவரும் கேள்வி எழுப்புதல் வேண்டாம். பயணத்தைப் பாதியில் முடிப்பது அந்த நாட்டவரை[நமிபியா] அவமானப்படுத்துவதாக அமையும். இடிந்தது ஒரு பாலம்தான். இது போல ஓராயிரம் பாலங்களை நம்மால் கட்ட முடியும்].

அவர் நாடு திரும்பும் நாளைப் பாதுகாப்புத் துறை மூலம் அறிந்து, ஒரு வாரம் போல் விருது வழங்கும் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடலாம்[இதற்காகவேனும் இந்தியாவில் அவர் ஒரு வாரம்  தங்கியிருப்பார் என்று நம்பலாம்].

வாழ்க சுற்றுலா நாயகன்! வெல்க விருது சூழ் வித்தகன்!!