அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒரு நாளுக்கான திருமணமும் ஒரு முறை[மட்டும்] உடலுறவும்!!!

//ஒரு நாள் திருமணங்கள் சீனாவின் பழம்பெரும் பாரம்பரியத்தில் இல்லை என்றாலும், சமீபத்தில் அத்தகைய திருமணங்கள் அந்நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. திருமணம் ஆகாமல் இளைஞர்கள் இறப்பது ‘சுப நிகழ்வு’ அல்ல என்னும் மூடநம்பிக்கையின் காரணமாக உருவானது இந்த ‘ஒரு நாள்' திருமணம்.

 ஏன் ஒரு நாள் திருமணம்? இந்த திருமணங்களின் பின்னணியில் உள்ள நிபுணர்கள், சீனாவில் பல இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை என்று நம்புகின்றனர். உண்மையில், அந்த இளைஞரின் குடும்பமும் திருமணத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் திருமணமாகாமல் வாழ்கின்றனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், சீனாவில் சிறுவர்கள் திருமணமாகாமல் இறப்பது சுபமாக கருதப்படவதில்லை. ஆகையால், ஒரு நாள் மட்டும் திருமணம் செய்துகொள்ள, தனிமையில் இருக்கும் அடையாளத்தை துடைத்தெறிய, இளைஞர்கள் இதுபோன்ற திருமணம் செய்ய விரும்புவதற்கு இதுவே காரணம். சீனாவின் சில பகுதிகளில், ஒரு இளைஞர் திருமணமாகாமல் இறந்துவிட்டால், கடைசியாக பிரியாவிடை கொடுக்கும் போது திருமணம் செய்துவைக்கப்படும் பாரம்பரியம் உள்ளது.

திருமணத்தன்று மட்டும் அவன் மணமகனாக இருப்பான்.//

மணமகளும் அவ்வாறே. அதன் பிறகு இவன் யாரோ, அவள் யாரோ என்னும் நிலைதான். 

இந்தத் திருமணத்திற்காக, இளைஞர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பணம் செலவழிக்கிறார்களாம். 

பொதுவாக, இளைஞர்களுக்குத் திருமணம் செய்விப்பதில் பெற்றோர்களுக்கு நிறையவே செலவாவதால், பல இளைஞர்கள் மணமாகாமலே வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘ஒரு நாள் திருமணம்’ செய்வதற்குக் காரணமாக அமைந்தது என்கிறார்கள் நிபுணர்கள். இந்நிகழ்வுகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நம் நாட்டில் ‘ஒரு நாள் திருமணங்கள் நடைமுறையில் இல்லை[உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை] என்றாலும், ஒரு பெண் மணமாகாமலே இருந்து இறக்க நேரிட்டால், அவள் கழுத்தில் ஓர் ஆடவனைக்கொண்டு தாலி கட்டும் சடங்கு இன்றளவும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது[தாலி கட்ட ஆட்கள் கிடைப்பது எளிதா என்பது தெரியவில்லை].

ஒரு நாட்டவருக்குரிய நாகரிகம் பிற நாடுகளுக்கும் பரவுவது வெகு இயல்பாக உள்ள நிலையில், சீனர்களிடமுள்ள இந்தத் திருமண முறை நம் நாட்டிலும் பரவினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

ஆனால், இதன் தொடர்ச்சியாக…..

மணமாகாமலே செத்துப்போவது நல்லதல்ல என்னும் மூடத்தனத்துக்கு மக்கள் ஆளாக நேர்ந்தது போலவே, ஒரு நாள் திருமணம் முடிந்து, அன்றிரவே உடலுறவுச் சுகம்[முதலிரவு] அனுபவிக்காமல் செத்துப்போவதும் நல்லதல்ல என்று நம்ப ஆரம்பித்தால்….. 

ஒரு முறை திருமணமும், ஒரு முறை உடலுறவும் கொள்வதற்குப் பெரும் செலவில் பெண்களை ஏற்பாடு செய்ய நேரிடும்.

ஆண்கள், மணமாகாமலோ, முதலிரவுச் சுகம் அனுபவிக்காமலோ சாகக் கூடாது என்பதாக நம்புவது போலவே, ஒரு பெண்ணும் அவ்வாறான நிலையில் சாகக் கூடாது என்று நம்பும் காலம் வருமேயானால் மக்கள் படும்பாடு விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால், நம் மக்களுக்கு நாம் சொல்ல விரும்பும் புத்திமதி….. 

“பையன்களைப் பெற்றெடுக்கும் அளவுக்கு நிறையப் பெண்களையும் பெறுங்கள். ஆண் பெண் எண்ணிக்கை சம விகிதத்தில் இருப்பது மிக மிக அவசியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்பதே!

* * * * *

https://india.postsen.com/world/931912.html

1 கருத்து: