வியாழன், 19 ஜூன், 2025

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்துறை அமைச்சர்!!!

முன்னாள் அரசு ஊழியர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் - அத்தகையச் சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நான் நம்புகிறேன் என்றார்[https://www.news18.com/amp/india/those-who-speak-english-in-country-will-soon-feel-ashamed-amit-shah-ws-l-9393567.html].

உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியது மனப்பூர்வமானதும் உண்மையானதும் என்றால், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மாநில மொழிகளையும்[இந்தி அவற்றுள் ஒன்று மட்டுமே] ஆட்சிமொழிகளாக ஆக்கியிருத்தல் வேண்டும்[இன்றைய அறிவியல்&தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே].

இவர்[கள்> +மோடி] நடைமுறைப்படுத்தியிருப்பதோ எங்கெங்கு காணினும் இந்தி... இந்தி... இந்தி... இந்தி[+சமஸ்கிருதம்] மட்டுமே!

இத்தனை வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு, மாநில மொழிகளை[தாய்மொழிகள்]க் காப்பது தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களின் கடமை ஆகும்.

இந்த உண்மையை அறிந்து உணர்ந்து செயல்படுவார்களா நம் மக்கள்?