எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 20 ஜூன், 2025

மோடிக்குக் கூட்டம் சேர்க்க அரசு விடுமுறை! இந்த நாடு இவரின் ‘பட்டா’ நிலமா?!

//ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று(20.06.2025)ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார்இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு[கூட்ட நெரிசல் காரணமாம். நெரிசல் இல்லாத விடுமுறை நாட்களில் நடத்தலாமே?] வெளியிட்டுள்ளது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சாபுவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டுள்ளது//[மாலைமலர்].

ஆட்சியமைத்த ஓராண்டு நிறைவு விழாவாம். ‘பைசா’ பயனில்லாத வெற்று ஆடம்பர விழா இது. மோடி பெரிதாக என்ன பேசிவிடப்போகிறார்? வாயால் நிறைய வடை சுடுவார்.

மோடி கலந்துகொள்வதால், பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி[மாணவர்களையும் பல்துறை அலுவலர்களையும் அதிக அளவில் அழைத்துவரலாம்], படம் பிடித்து, “ஆகா, மோடி பேச்சைக் கேட்க இத்தனைக் கூட்டமா?” என்று செய்தி வெளியிட்டு மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தி, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்னும் பிம்பத்தை உருவாக்க உதவும் நடவடிக்கையே இந்த விடுமுறை அறிவிப்பு.

சுயநலமிகள் நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்; இன்னும் என்னவெல்லாமும் நடக்கக்கூடும்!

சனநாயகம் என்னும் பெயரில் ஒரு சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாட்டு மக்கள்!

https://www.maalaimalar.com/news/national/pm-visit-odisha-declares-half-day-holiday-in-all-govt-offices-in-bhubaneswar-on-friday-777230